siruppiddy

திங்கள், செப்டம்பர் 23, 2013

முத்துமாரிஅம்மன் தேர் திருவிழா காணொளி


சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் அருள் பாலித்து எமை எல்லாம் ஆண்டு வருகிறாள்
 அவள் அருளால் எமது வாழ்கை சிறந்தோ ங்கி வளம் ஓங்கி வாழ்வோங்கி நிற்க காரணமாய் காட்சி தரும் நாயகி அவள்
2013 ஆண்டுத் திருவிழா இனிதே நடந்தேறியது இதில் பக்தர்கள் கலந்து தங்கள் நேர்த்திகளை நிறைவேற்றியுள்ளார்கள்
 இந்த ஆண்டுத்தேர்த்திருவிழாவும் இனிதே நடந்தேறியுள்ளது இதன் உபயகாரர்கள் நல்லையா.சோதிப்பிள்ளை குடும்பத்தினர் இவர்கள் தேர்திருவிழாவை காட்ச்சிப்படுத்தி உங்கள் பார்வைக்காகவும் ஊர் உறவுகள் பார்வைக்காகவும்
 தந்து உதவியுள்ளார்கள் இவர்கள் போன்று எங்கள் ஊர்பதிவுகளைத் தந்து உதவினால் உலகப்பந்தில் வலம் வரும்
 ஒருகரம் தட்டி ஓசை வராது இணைவோம் செயல்படுவோம்  (11.03.13)

செவ்வாய், செப்டம்பர் 10, 2013

பிள்ளையார்சதுர்த்தி

 
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்
 இவை நான்கும் கலந்து உனக்கு
 நான் தருவேன்..
கோலம் செய் துங்கக் கரிமுகத்துத்தூமணியே
 நீ எனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா.
வினையெல்லாம் தீர்த்துவைப்பாய் விநாயகா.
அனைவருக்கும் பிள்ளையார்
 சதுர்த்தி வாழ்த்துகள் —