siruppiddy

திங்கள், ஆகஸ்ட் 31, 2020

தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய தேர்த்திருவிழா,31-08-20

 

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ் தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா.31-08-2020. இன்று திங்கட்கிழமை  காலை இடம்பெற்றது.
 அடுத்து காலை 8 மணிக்கு வசந்த மண்டப பூஜை 
ஆரம்பமானது.
அதனை தொடர்ந்து உள் வீதி உலா வந்த துர்க்கை அம்மன் காலை 9 மணியளவில் தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு 
அருள் காட்சி அளித்தார்.
 கொடியேற்றத்துடன் மகோற்சவ திருவிழா ஆரம்பமானது.
தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற்ற திருவிழாவை அடுத்து31-08-2020. இன்று திங்கட்கிழமைதேர்த்திருவிழா
 இடம்பெற்றது.
நாளை செவ்வாய்கிழமை   தீர்த்த திருவிழா 
இடம்பெறவுள்ளது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>





திங்கள், ஆகஸ்ட் 17, 2020

யாழ் நல்லூர் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா .17.08.20

 

 யாழ்.நல்லூர் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழாவைக்காண வரலாறு காணாத வகையில்
.வெகு விமர்சையாக 20.08.2017 இன்று இலட்சக்கணக்கான பக்தர்கள் 
வருகைத் தந்துள்ளார்கள்.
உள்நாட்டில் இருந்து மட்டுமல்லாது வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் மக்களும் இன்று யாழ்ப்பாணத்திற்கு படையெடுத்துள்ளதை 
காணக்கூடியதாக உள்ளது.
யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் தற்போது வெகு சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.
கொடியேற்றத்துடன் ஆரம்பமான நல்லூர் திருவிழா தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறுவதோடு, 24ஆம் நாளான 17-08-20.இன்று தேர்த்திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது .
அந்த வகையில் தற்போது யாழ்ப்பாணம் முழுவதும் திருவிழா களைகட்டியுள்ளது. மக்கள் அனைவரும் மிகவும் பக்தியுடன் தேரின் வடம் பிடித்து வருவதை காணக்கூடியதாக உள்ளது.
என்றுமில்லாத வகையில் யாழில் கூடியுள்ள பக்தர்களின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
இதில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவவதை  
காணக்கூடியதாக உள்ளது.
ஆலயத்தை சுற்றியும் ஏராளமான பக்த அடியார்கள் காணப்படுகின்றார்கள். தேரைச் சூழ்ந்துள்ள மக்கள் கூட்டத்தையும், வடம் பிடித்து தேரை இழுக்கும் காட்சிகளையும் பார்க்கும் போது மெய்சிலிர்க்க 
வைக்கின்றது

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 


 

சனி, ஆகஸ்ட் 01, 2020

பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி தங்கா அகிலா 01.08.2020


 யாழ் தோப்பு  அச்சுவேலியை   பிறப்பிடமாகவும்,  தற்போது  கனடாவில் வசிக்கும்   திரு திருமதி தங்கராஜா அகிலேஸ்வரி ( அகிலா )அவர்களின் ஐம்பதாவது  பிறந்த நாள் .01.08.2020..இன்று இவர்தனது பிறந்த நாளை
உற்றார்  உறவினர்
 நண்பர்களுடன்  தனது இல்லத்தில் வெகுசிறப்பாக  இன்று கொண்டாடுகின்றார்
.இவரை அன்புக் கணவர்  பிள்ளைகள் அன்பு அம்மா சகோதரர்கள் அத்தான் அண்ணா தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை
தோப்பு போதிப்பிள்ளையார்
இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம்  நிலாவரை .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  வாழ்த்துகின்றன.