siruppiddy
ஏனைய செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஏனைய செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஜூலை 15, 2022

நீங்கள் ஒரு ரூபாய் தானம் செய்தால் ஒரு கோடி பெறலாமாம்

இன்றைய தலைமுறையைச் சார்ந்த பலரின் எண்ணம் என்னவென்றால் எதையும் எளிதில் அடைந்துவிட வேண்டும் என்பதே. ஆனால் இறை அருளை பெறுவதென்பது அத்தகைய எளிதான
 விடயம் இல்லை.
ஆனால் இல்லாதவர்களுக்கு தானம் செய்வதின் மூலம் இறை அருளை கூட எளிதில் பெறலாம். ஒரு ரூபாய் தானம் செய்து ஒரு கோடி ரூபாய் பெறுவதெப்படி என்பதை பற்றி இப்போது
 பார்ப்போம்.
வைகாசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசிக்கு வரூதிநி ஏகாதசி என்று பெயர். அந்த நாளில் காலையில் எழுது குளித்துவிட்டு பெருமாள் கோவிலிற்கு சென்று துளசி அர்ச்சனை செய்வது பல 
நன்மைகளை தரும்.
அதோடு அன்றைய தினத்தில் பணத்திற்காக கஷ்டப்படும் எழமானவர்களின் கல்விக்கு உதவும்படியாக ஒரு ருபாய் தானம் செய்தாலும் அது பல கோடிகளாய் நமக்கு திரும்ப கிடைக்கும் என்பது ஐதீகம்.
அதே போல் வைகாசி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசிக்கு மோகினி ஏகாதசி என்று பெயர். அன்று காலை எழுந்ததும் குளித்துவிட்டு பெருமாள் கோவிலிற்கு சென்று வழிபட்டால் பாவம் நீங்கி 
புண்ணியம் பெருகும்.
அதோடு புத்தி கூர்மையடையும். இந்த மாபெரும் ரகசியத்தை ராமபிரான் அவரது குல குருவான வசிஷ்டரிடம் கேட்டறிந்ததாக 
புராணம் கூறுகிறது

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>




வெள்ளி, ஜூன் 03, 2022

சுமங்கலிப்பெண்கள் நெற்றியில் குங்குமம் வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்

சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். அம்பிகையின் வகிட்டில் உள்ள குங்குமம் பக்தர்களுக்கு 
சேமத்தைக் கொடுக்கும்.
சுமங்கலிப் பெண்களின் சீமந்த பிரதேசம் ஸ்ரீமகாலட்சுமியின் இருப்பிடம் சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது.
வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப்பெருக்கும்.
* குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும். குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம்.
* பெண்கள் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.
* அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும். திருமணப்புடவை அரக்கு நிறத்தில் இருப்பது நல்லது.
* தெய்வீகத்தன்மை, சுபதன்மை, மருத்துவத்தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக
 நன்மைகள் உண்டாகும்.
* திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும் வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு.
* ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
*  கட்டைவிரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த 
துணிவைக் கொடுக்கும்.
* குருவிரலால் (ஆள்காட்டி விரல்) குங்குமம் அணிவது முன்னனித்தன்மை, நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை
 ஊக்குவிக்கும்.
* சனிவிரல் (நடுவிரல்) குங்குமம் இட்டுக் கொள்வது தீர்காயுளைக் கொடுக்கும். குங்குமம் அணிவது தெய்வீக தன்மை, உடல் குளிர்ச்சி மற்றும் 
சுயக்  கட்டுபாட்டிற்கு நல்லது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>


வெள்ளி, பிப்ரவரி 04, 2022

நமக்கு பணவரவை ஈர்த்து அதிகரிக்க செய்யும் கருமஞ்சள்

கருத்துப் போய் உள்ள இந்த மஞ்சள் உள்ளே நீல நிறத்தில் இருக்கும். வட மாநிலங்களில் இந்த மஞ்சளை பணத்தை ஈர்ப்பதற்கு மற்றும் ஆன்மீக காரியங்களில் பயன்படுத்துவது வழக்கம்.சக்தியுள்ள கருமஞ்சள் சனி பகவான் மற்றும் ராகுவால் ஏற்படும் பாதிப்புகளையும் 
குறைகிறது.
பணம் வேண்டி வெளியில் புறப்பட்டு சென்றால் இந்த மஞ்சளை சிறிது கல்லில் இழைத்து நெற்றியில் திருநீறு போல பூசிக் கொண்டு செல்லலாம். கண்டிப்பாக சென்ற இடத்தில் எதிர்பார்த்த பணம் கிடைக்கும். பணத்தை ஈர்ப்பதில் கிராம்பை போல, கருமஞ்சளும் முக்கிய பங்கு 
வகிக்கிறது.
நீண்ட நாளாக அடைக்க முடியாத கடனை கூட உங்கள் பணப்பெட்டியில் இந்த கரு மஞ்சளை வைப்பதன் மூலம் அடைத்து விடலாம். கரு மஞ்சள் இருக்கும் இடத்தில் பண ஈர்ப்பு இருக்கும். பணப் பிரச்சினைகள் நீங்கும்.
பணத்தை ஈர்க்க பெருமளவு பயன்படும் கருமஞ்சள் உங்களுடைய பிரச்சினைகளை தீர்க்கும்.
அது மட்டுமல்லாமல் கிரக தோஷங்கள் நீங்கவும் கருமஞ்சள் உபயோகப்படுத்தப்படுகிறது.சிகப்பு அல்லது பச்சை நிற பட்டுத்துணியில் இந்த மஞ்சளை வைத்து இறுக்கமாக கட்டி அவற்றை பணம் இருக்கும் இடங்களில் வைத்து விட்டால் போதும். அந்த இடத்தில் பணவரவு அதிகமாக இருக்கும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



வியாழன், ஆகஸ்ட் 12, 2021

ஆடிக் வெள்ளியில் இந்த 1 பொருளை வாங்கினால் வறுமை நீங்கும்,

ஆடி மாதம் என்றாலே மங்கல பொருட்களுக்கு பஞ்சமே இல்லாமல் வாங்கி குவிக்கக் கூடிய ஒரு இனிய மாதமாக இருக்கிறது. ஆடி மாதத்தில் வாங்கும் எந்த ஒரு மங்களப் பொருட்களும் பன்மடங்கு பெருகி நமக்கு சுபீட்சத்தை அள்ளிக் கொடுக்கும். அது மட்டுமல்லாமல் மகாலட்சுமி வாசம் செய்யும் மங்கல பொருட்களாக இருக்கும் மஞ்சள், குங்குமம் போன்ற பூஜைக்கு உரிய பொருட்களை ஆடி மாதத்தில் வாங்கினால் மாங்கல்ய 
பலம் நீடிக்கும்.
ஆடி மாதம் வாங்க கூடிய எந்த ஒரு பொருளும் அள்ள அள்ள குறையாத செல்வத்தை கொண்டு வந்து சேர்க்கும். கடைசியாக வரும் ஆடி வெள்ளியில் இந்த பொருளை வாங்கி வையுங்கள். ஏற்கனவே இந்த பொருளை வாங்கிவிட்டு இருந்தால் கூட பரவாயில்லை, கொஞ்சமாவது அன்றைய நாளில் இந்த ஒரு பொருளை வாங்கி பயன்படுத்துவதால் ஏழேழு பிறவிக்கும் வறுமை நீங்கி, செல்வம் ஆனது உயரும். அப்படி என்ன பொருள் அது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து பதிவை நோக்கி 
பயணிப்போம்
ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளியிலும் ஏதாவது ஒரு மங்கல பொருட்களை வாங்கி வருவது நல்லது. அவை புதிதாக நம்மிடம் சேரும் பொழுது தெய்வ கடாட்சம் ஆனது நீடித்து நிலைத்து 
நிற்கும். குறிப்பாக வாசனை மிகுந்த மங்கல திரவியங்கள், பொடிகள் போன்றவற்றை வாங்குவது மிகவும் சிறப்பான பலன்களைக் 
கொடுக்கும். ஜவ்வாது, 
அத்தர், பன்னீர், புனுகு, ஏலக்காய், பச்சை கற்பூரம் போன்ற பொருட்களை வாங்குவது இன்னும் சிறப்பு. நீங்கள் ஒவ்வொரு முறை சாமி கும்பிடும் பொழுது உங்கள் பூஜை அறையில் கட்டாயம் பஞ்ச பாத்திரத்தில் தண்ணீரை வைக்க வேண்டும். ஒவ்வொரு முறை பூஜை செய்யும்
 பொழுதும் அந்த தண்ணீரை புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். பஞ்ச பாத்திரத்தில் இருக்கும் தண்ணீர் மறுநாள் பார்த்தால் கொஞ்சம் குறைந்து இருக்கும். எனவே அந்த தண்ணீரை மீண்டும் பயன்படுத்தக் கூடாது. புதிதாக தண்ணீரை நிரப்பி தான் 
பயன்படுத்த வேண்டும்.
ஞ்ச பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி வைத்தால் மட்டும் போதாது, அதை தீர்த்தமாக மாற்ற துளசி இலைகள், பச்சை கற்பூரம், கிராம்பு போன்றவற்றை சேர்ப்பது உண்டு. இது எதுவுமே உங்களிடம்
 இல்லை என்றால் கூட பரவாயில்லை. ஏலக்காயை மட்டும் நுணுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். பூஜை அறை முழுவதும் தெய்வீக மணம் கமழும். வீட்டில் 
இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் விலகி ஓடிவிடும். பிரச்சனைகள் தானாகவே குறைய ஆரம்பித்துவிடும். அது போல 
ஆடி வெள்ளியில் கடைசி நாளில் வாசனைப் பொருட்களை வாங்குவதும், கூடவே ‘அரிசி’ வாங்கி வைப்பது மிகவும் நல்லது. அன்னபூரணியாக இருக்கும் அரிசியை
 ஆடி கடைசி வெள்ளி அன்று வாங்கினால் அற்புத பலன்களை காண முடியும். குடும்பத்தில் இருக்கும் வருமானப் பற்றாக்குறை நீங்கி, வறுமை அகன்று, செல்வம் ஆனது பன்மடங்கு உயரும். தன, தானியம் பெருகும் என்பது நம்பிக்கை எனவே ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அன்று உங்களிடம் அரிசி இருந்தாலும், ஒரு கிலோ அரிசியை வாங்கி அன்றைய நாளில் அந்த புது அரிசியை கொண்டு சமைத்து, அம்பாளுக்கு சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் படையுங்கள்! இப்படி செய்வதால் சிறப்பானதொரு பலனை காணலாம்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





செவ்வாய், ஏப்ரல் 20, 2021

தொண்டைமனாறு ஸ்ரீ செல்வச் சந்நிதி ஆலயத்தேர் எரியூட்டல் 20.04..1986

யாழ் வடமராட்சியில் அமர்ந்து அருள் பலித்துக்கொண்டிருக்கும்  பிரசித்திபெற்ற தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் சித்திரத் தேர்  1986 ஆம் ஆண்டு இராணுவத்தினால் எரிக்கப்பட்ட நாள் 20.04..1986 அன்று  
இலங்கையின் முதலாவது மிகப் பெரியதும் ,உலகில் நான்காவது பெரியதேர்  என வர்ணிக்கப்பட்ட பிரசித்திபெற்ற தொண்டைமானாறு
 செல்வச் சந்நிதி சித்திரத் தேர் 20-04-1986 அன்று ஸ்ரீலங்கா இராணுவத்தால் எரியூட்டி சாம்பலாக்கப்பட்டு இன்றுடன் 35 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




செவ்வாய், ஏப்ரல் 13, 2021

மலரும் மங்களகரமான பிலவ வருடப் பிறப்பு சுப நேரங்கள் .14.04.2021

 மலரும் மங்களகரமான பிலவ வருடம் (14.04.2021) புதன்கிழமை அதிகாலை 1.39 மணிக்கு பூர்வ பக்க துதியை திதியில் பரணி நட்சத்திரத்தின் இரண்டாம் பாகத்தில் மகர லக்கினத்தில் பிறக்கிறது.
விஷூ புண்ணிய காலம்
முன்னிரவு நாடி 38 விநாடி 51 (9.39 மணி) முதல் அன்று பின்னிரவு நாடி 58 விநாடி 51 (5.39 மணி) வரை விஷூ புண்ணிய காலமாகும்.
மருத்து நீர், ஆடை
இந்நேரத்தில் மருத்து நீர் வைத்து நீராடி நீலம், சிவப்பு நிறமுள்ள பட்டாடை ஆயினும் நீலம், சிவப்பு கரை அமைந்த புதிய பட்டாடை ஆயினும் அணிய வேண்டும்.
உண்டிகள்
அறுசுவை உணவுடன் பொரிக்கறி, கசப்பு என்பவை சேர்த்தருந்த வேண்டும்.
தோஷ நட்சத்திரங்கள்
அச்சுவினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம், பூரம், உத்தரம் 2ம், 3ம், 4ம் பாதம், அத்தம், சித்திரை 1ம், 2ம் பாதம், பூராடம் இவற்றில் பிறந்தோர் தவறாது மருத்துநீர் தேய்த்து ஸ்நானஞ் செய்து இயன்ற தானதருமங்களைச் செய்து சங்கிரம தோஷத்தை நிவர்த்தி செய்யக்கடவர்.
கைவிசேஷம்
14.04.2021 காலை 09.09 - 09.52 வரை
14.04.2021 பிற்பகல் 2.22 - 4.11 வரை
16.04.2021 அதிகாலை 4.14 - 5.07 வரை
17.04.2021 காலை 07.40 - 09.00 வரை
17.04.2021 பிற்பகல் 03.04 - 03.59 வரை
ஆதாய விரய பலன்
மேடம் - நஷ்டம்
இடபம் - நஷ்டம்
மிதுனம் - சமசுகம்
கர்க்கடகம் - நஷ்டம்
சிங்கம் - பெருநஷ்டம்
கன்னி - சமசுகம்
துலாம் - நஷ்டம்
விருச்சிகம் - நஷ்டம்
தனு - அதிகலாபம்
மகரம் - சமசுகம்
கும்பம் - சமசுகம்
மீனம் - அதிகலாபம்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> 

 

சனி, செப்டம்பர் 26, 2020

இந்தியாவில் ஒரு கோவிலில் தங்கத்தை பிரசாதமாக வழங்கும் அதிசயம்

 

கோவில்களில் பிரசாதம் வழங்கப்படுவது என்பது சாதாரணமான ஒன்று. பெரும்பாலும் கோவில் பிரசாதங்கள் மக்கள் உண்ணக்கூடியவையாக இருக்கும். ஆனால் சில கோவில் பிரசாதங்கள் 
அப்படிப்பட்டதாக இருக்காது. சிலசமயம் விலையுயர்ந்த பொருட்கள் கூட கோவில் பிரசாதமாக வழங்கப்படலாம். ஆனால் 
இந்தியாவில் ஒரு கோவிலில் கோடிக்கணக்கான மதிப்புள்ள தங்கங்கள் பிரசாமாக வழங்கப்படுகின்றதாம்.
அந்த கோவில் பற்றி பார்க்கலாம். இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் ரத்லத்தில் உள்ள மஹாலக்ஷ்மி கோயில் அதன் பிரசாதத்திற்கு 
மிகவும் புகழ்பெற்றது. இந்த
 கோவில் ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான மதிப்புள்ள பிரசாதங்களைப் பெறுகிறது. அதில் தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் கூட அடங்கும். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு, இந்த பிரசாதத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதி பக்தர்களுக்கு பிரசாதம் வடிவத்தில் 
திருப்பித் தரப்படுகிறது.
கோவிலுக்கு வந்து இந்த பிரசாதத்தைப் பெற மக்கள் ஆயிரக்கணக்கான மைல்கள் பயணம் செய்கிறார்கள் என்று கூறப்படுகிறது. அதற்கான பயணச் செலவு பெரும்பாலும் பிரசாதத்தின் மதிப்பை 
விட அதிகமாக இருக்கும். இருப்பினும், இங்கே தங்கம் மற்றும் வெள்ளி பிரசாத் நகைகள் அல்லது விலைமதிப்பற்ற உலோகமாக 
கருதப்படுவதில்லை. இது உண்மையில் செல்வத்தின் தெய்வத்தின் ஆசீர்வாதமாகக் கருதப்படுகிறது. அது ஒருபோதும் செலவழிக்கவோ விற்கவோ படுவதில்லை.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



திங்கள், பிப்ரவரி 24, 2020

ஏழரைச் சனியிடம் சிக்கிய ராசிக்கு காத்திருக்கும் திடீர் விபரீத ராஜயோகம்

மார்ச் மாதம் சூரியன் கும்பம், மீனம் ராசிகளில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசியில் குரு, கேது, செவ்வாய், மிதுனத்தில் ராகு மேஷம் ராசியில் சுக்கிரன் மகரம் ராசியில் சனி , கும்பம் ராசியில் புதன் வக்ர
 நிலையில் இருக்கிறார்.இந்த கிரகங்களின் சஞ்சாரம் ராசி மாற்றங்களினால் விருச்சிகம் மற்றும் தனுசு ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.விருச்சிக ராசி:விருச்சிக ராசிக்கு 
கிரகங்கள் சஞ்சாரத்தை பார்த்தால் நான்காம் 
வீட்டில் சூரியன் புதன், இரண்டாம் வீட்டில் கேது, செவ்வாய், குரு, மூன்றாம் வீட்டில் சனி, ஆறாம் வீட்டில் சுக்கிரன் என 
கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. 
சனி சந்தோஷமாக 
இருக்கிறார்.மாணவர்களுக்கு ரொம்ப நல்ல மாதம். பிசினஸ் செய்பவர்களுக்கு ரொம்ப நல்ல மாதம். மாத 
தொடக்கத்தில் சுக்கிரன் ஆறாம் வீட்டில் இருப்பதால் கணவன் மனைவி உறவில் விட்டுக்கொடுத்து போங்க.தேவையில்லாத வீண் விவாதங்களை தவிர்த்து விடுங்கள். வம்பு வழக்குகளை 
தவிர்த்து விடுங்கள்.
மார்ச் 22ஆம் திகதி உங்க ராசிநாதன் செவ்வாய் இரண்டாம் வீட்டில் இருந்து மூன்றாம் வீட்டிற்கு சென்று உச்சம் பெற்று அமரப்போகிறார்.மூன்றாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ள சனியோடு செவ்வாய் உச்சம் பெற்று இணைகிறார். சகோதர சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும். பணவரவு அதிகமாகும்.புதிய தொழில் தொடங்கலாம். சிலருக்கு நல்ல வேலைகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவிகள் கிடைக்கும். மகரம் ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாயின் பார்வை
 மேஷம் ராசியில் இருக்கும் சுக்கிரன் மீதும் விழுவதால் காதல் மலரும். காதல் உறவில் கவனம் தேவை
குரு பகவான் மாத இறுதியில் அதிசாரமாக மூன்றாம் வீட்டிற்கு செல்கிறார். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்க. மாத இறுதியில் சுக்கிரன் ஆறாம் வீட்டில் இருந்து ஏழாம் வீட்டிற்கு 
சென்று சஞ்சரிக்கும் காலத்தில் சந்தோஷம் அதிகமாகும்.கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகமாகும். சுக்கிரன் பார்வை உங்க ராசியின் மீது விழுவதால் இந்த மாதம் நீங்க ரொம்ப 
பொறுமையாக இருங்க.
நிதானமாக இருந்தால் நிறைய நல்லது நடக்கும் ரொம்ப உணர்ச்சிவசப்படாதீங்க. திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை
 இந்த மாதம் வேண்டாம்.
தனுசு ராசி:மார்ச் மாதம் உங்க ராசிக்கு கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் ராசியில் குரு, கேது, செவ்வாய், இரண்டாம் வீட்டில் சனி, சூரியன்,புதன் 3ஆம் வீட்டிலும் சுக்கிரன் ஐந்தாம் வீட்டிலும் சஞ்சரிக்கின்றனர்
.ராகுவின் சஞ்சாரம் ஏழாம் வீட்டில் இருக்கிறது. இந்த மாதம் உங்க ராசிக்கு யோகம் தரக்கூடிய புதன் வக்ர 
நிலையில் இருந்து வக்ர நிவர்த்தி அடைகிறார்.வேலையில் நல்ல மாற்றம் வரும். புதனின் சஞ்சாரம் உங்களுக்கு யோகத்தை கொடுக்கும். சூரியன் உ
ங்க ராசிக்கு மாத முற்பகுதியில் முயற்சி ஸ்தானமான 
மூன்றாம் வீட்டிலும் மாத பிற்பகுதியில் 
நான்காம் வீட்டிலும் சஞ்சரிக்கிறார்.பாக்ய ஸ்தான அதிபதி 
சூரியன் நான்காம் வீட்டில் சஞ்சரிக்கும் போது சுகங்களை கொடுப்பார். சுக்கிரன் உங்களுக்கு சாதகங்களை செய்ய மாட்டார். என்றாலும் செவ்வாயின் பார்வை சுக்கிரன் மீது விழுவதால் கொஞ்சம் எச்சரிக்கையாக 
இருப்பது அவசியம்.
மாத இறுதியில் குரு உங்க ராசிக்கு இரண்டாம் வீட்டிற்கு செல்கிறார். சுப பேச்சுக்கள் ஆரம்பிக்கலாம். திருமண பேச்சுவார்த்தைகள் சுபமாக நடைபெறும்.குடும்பம் குதூகலமாக இருக்கும். தடைகள் இடைஞ்சல்கள் நீங்கும். வேலை இல்லாதவர்களுக்கு 
நல்ல வேலை கிடைக்கும். மாணவர்களுக்கு ரொம்ப நல்ல மாதம்.நினைவாற்றல் அதிகமாகும். உயர்கல்வி
 படிக்க யோகம் வரும். மாத பிற்பகுதியில் நிறைய நன்மைகள் நடக்கும். உடல் ஆரோக்கியம் அதிகமாகும். உடல் உபாதைகள் நீங்கும். மார்ச் மாதம் தனுசு ராசிக்காரர்களுக்கு யோகமான மாதமாக அமையும்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


சனி, ஜனவரி 04, 2020

ஐயப்பன் புகழ் பாடும் காணொளி திந்தகத்தோம் திந்தகத்தோம் அய்யப்பா.

இது ஐயப்பன் விரதம் அனுஷ்டிக்கப்படும் மாதம் ஆம் ..விரதங்களில் மிகவும் கடினமான மிகவும் பக்தி பூர்வமான கடுமையான விரதங்களில் இதுவும் ஒன்று…இந்த மாதத்தில் விரதம் இருக்கும் சாமி மார்கள் ஐயப்பனை தரிசிக்க கேரளாவில் உள்ள ஐயப்பன் மலைக்கு
 செல்வது வழக்கம்.
மிக நீண்ட கடினமான இந்தப் பயணத்தில் உலகெங்கும் இருந்து வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் கடும் விரதம் இருந்து, ஐயப்பன் புகழ் பாடி ஐயப்பனை தரிசிப்பது வழக்கம்… சபரி மலை ஏறி ஐயப்பனை தரிசிப்பவர்களுக்கு வாழ்வில் எந்நாளும் இன்பமே ….தீர்க்க ஆயுளுடன் இன்பகரமாக வாழ முடியும்
 என்பது ஐதீகம்..
அந்த வகையில், விரத காலத்தில் ஐயப்பம் புகழ் பாடும் பக்தர்கள் வரிசையில் பல ஆயிரம் பாடல்கள் பல்வேறு மொழிகளிலும் வெளிவந்துள்ளன…. இன மத பேதங்களுக்கு அப்பால், ஐயப்பனை தரிசிக்கும் பக்தர்கள் வரிசையில் ஐயப்பன் புகழ பாடி அண்மையில் வெளிவந்த மிகவும் இனிய கண்கவர் நடனத்துடன் கூடிய பாடல் ஒன்று தமிழ் மொழியில் இணையத்தில் வேகமாக 
வைரலாகி வருகின்றது
திந்தகத்தோம் திந்தகத்தோம் அய்யப்பா என்று ஆரம்பிக்கும் இந்த அழகிய பாடலை பிரபல தென்னிந்தி பின்னணிப் படாகர் உன்னிக்கிருஷ்ணனின் செல்வப் புதல்வி உத்தராவின் கணீர்க்குரலில் பாடியுள்ளார். இந்தபாடலுக்கு பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் ராம் சுரேந்தர் அவர்கள் இசை வழங்கியுள்ளார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
இந்தப் பாடலை நீங்களும் பார்த்து ஐயப்பனை தரிசிப்பபதுடன் நின்று விடாது, எல்லோரும் பார்த்து ஐயப்பன் புகழை பரவச் செய்ய இதனை ஏனையவர்களுக்கும் பகிருங்கள்…. உலகமெங்கும் ஐயப்பன் புகழ ஓங்கி அகிலமெங்கும் சாந்தியும் சமாதானமும் திளைத்திட இந்த ஐயப்பன் புகழ் பாடும் காணொளியை பிறருக்கும்
 பகிர்ந்திடுங்கள்

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

     


                        

சனி, ஜூன் 28, 2014

நயினை நாகபூஷணி அம்மன் மகோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது!


naka1
வரலாற்றுச் சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று பகல் 12 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்து 16 தினங்கள் திருவிழா நடைபெறவுள்ளது. எதிர்வரும் யூலை மாதம் 11 ம் திகதி தேர்த்திருவிழாவும் மறுநாள் சனிக்கிழமை தீர்த்தத்திருவிழாவும், யூலை 13 ம் திகதி தெப்பத் திருவிழாவும் நடைபெறும். ஆலய மகோற்சவத்தை முன்னிட்டு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இன்றைய கொடியேற்றத் திருவிழாவில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்
மற்றைய செய்திகள்


naka naka0

ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கொடியேற்றம் .

வரலாற்றுச்சிறப்பு மிகு நயினாதீவு அருள்மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பாள்
ஆலய உயர் திருவிழா எதிர்வரும் [28.06.2014] கொடியேற்றத்துடன் .
ஆரம்பம் ...

செவ்வாய், மே 20, 2014

வல்லை பிள்ளையார் கோயில்

யாழ்ப்பாணம் மற்றும் வடமராட்சி  திசையில் இருந்து வருபவர்கள் தங்கள் வேலைகள்
பயணங்கள் மிகவும் சிறப்பாக நடைபெற மிகுந்த நம்பிக்கையுடன் வணங்கும் மிகவும் சக்தி வாய்ந்த
வல்லை பிள்ளையார் 
அருள்மிகு வல்லை பிள்ளையார் கோவில்

 

செவ்வாய், மே 13, 2014

சுவிசிலுள்ள சைவ ஆலயங்கள்


அருள்மிகு சிவன் கோவில் Industrie Str.34 / Postfach. 1006 CH-8152 Glattbrugg. T.P:- 044 371 02 42 http://www.sivankovil.ch அட்லீஸ்வீல் சிவசுப்பிரமணியர் ஆலயம். Berg Str.54 Sihl weg.03 8030 Zürich. 8134 Adliswil ZH. T.P:- 044 262 33 88 T.P:- 044 709 06 30 http://www.tamilkrishna.org http://www.mkzh.ch சிறீ விஸ்ணு துர்க்கை அம்மன் ஆலயம் அருள்மிகு கதிர்வேலாயுத சுவாமி ஆலயம் Sood Ring.34 Industrie Str.27 8134 Adliswil ZH. 9430 St-Margretten/SG T.P:- 044 771 11 70 T.P:- 071 740 08 16 http://www.srithurkkaswiss.ch ஹரே கிருஸ்ணா ஆலயம்.Berg Str.54 Sihl weg.03 8030 Zürich. 8134 Adliswil ZH. T.P:- 044 262 33 88 T.P:- 044 709 06 30 http://www.tamilkrishna.org அருள்மிகு ஸ்ரீ நவசக்தி ஆலயம் கூர் Sri Navasakthi Vinayagar Temple Chur Bienenstrasse 6, 7000 Chur, Tel. 081 253 16 52 Sri Navasakthi Vinayagar Temple, Postfach 332, 7007 Chur லவுசான் பிள்ளையார் கோவில் Av. Rochelle.12 6 Via Monnet 1008 Prilly VD. ஜெனிவா பிள்ளையார் கோவில் Av. Rochelle.12 6 Via Monnet 1008 Prilly VD. 1214 Vernier GE. T.P:- 022 341 15 96 சொலத்தூன் துர்க்கை அம்மன் ஆலயம். Braehl Str.06 Bahn Str.21 2540 Grenchen SO. 3008 Bern. T.P:- 032 653 30 64 பேர்ன் சிறீ கல்யாண சுப்பிரமணியர் ஆலயம். Braehl Str.06 Bahn Str.21 2540 Grenchen SO. 3008 Bern. T.P:- 032 653 30 64 T.P:- 031 381 45 22 அருள்ஞானமிகு ஞானலிங்கேஸ்வரர் ஆலயம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் Schwarztorstr. 102 Bern Str.116 3007 Bern. 3250 Lyss. T.P:- 078 645 30 42 புறுக்டோர்வ் பிள்ளையார் ஆலயம் லங்கனோ விநாயகர் ஆலயம். Saege gasse.18 Schaerischachen.809a 3400 Burgdorf. 3552 Bärau. T.P:- 034 495 63 87 சிறீ சித்தி விநாயகர் ஆலயம். Industrie Weg.43 Hard Str.56 3612 Steffiburg அருள்மிகு இந்து ஆலயம் பாசல் Industrie Weg.43 Hard Str.56 3612 Steffiburg. 4132 Muttenz BL. T.P:- 061 332 10 96 http://www.hindutemple.ch ஓல்னர் மனோன்மணி அம்பாள் ஆலயம். Holder Matt Str.03 Industries Str.44 4632 Trimbach/Olten. 5000 Aarau T.P:- 062 293 20 98 அறோ முருகன் ஆலயம். Holder Matt Str.03 Industries Str.44 4632 Trimbach/Olten. 5000 Aarau T.P:- 062 293 20 98 T.P:- 062 822 01 96 லுட்சேர்ன் துர்க்கை அம்மன் ஆலயம். ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் சுக் Bahnhof Str.19a Halden Str.05 6037 Root LU. 6340 Baar. T.P:- 041 450 02 84 T.P:- 041 760 54 47 சிறீ சிவசுப்பிரமணியசுவாமி கோவில் கூர் சிறீ நவசக்தி விநாயகர் ஆலயம். Via Gaggiolo.35 Benen Str.06 6855 Stabio TI. 7000 Chur. T.P:- 081 253 16 52

வியாழன், ஜூன் 27, 2013

பெண் குழந்தைகள் விளக்கேற்றுவதால் அவர்களின் முகப்பொலிவு கூடும்

 
நம் வீட்டிலுள்ள பெண் குழந்தைகளை அவர்களது தாய்மார்கள் தினமும் விளக்கு ஏற்றும்படி பணிக்க வேண்டும். இதில் அவர்களின் இறை பணி மட்டுமில்லாமல் அவர்களின் தேஜசும் (அதாவது முகபொலிவும்) கூடுகிறது. இதை சோதிக்க விரும்பினால், தாய்மார்கள் தங்கள் பெண்ணை ஒரு குறிப்பிட்ட தினத்திலிருந்து விளக்கு ஏற்றும்படி சொல்லுங்கள். அன்று தங்கள் பெண்ணிடம் அவளது முக பொலிவை முகம் பார்க்கும் கண்ணாடியில் பார்க்க சொல்லுங்கள். நீங்களும் பாருங்கள். அன்றைய தேதியை கண்ணாடியின் மூலையில் குறித்து வையுங்கள்.

சரியாக 30 நாட்கள் (இதில் வயது வந்த பெண்களின் இயற்கையான உபாதை நாட்களை கணக்கில் கொள்ளாதீர்கள்) கழித்து, மீண்டும் உங்கள் பெண்ணை கண்ணாடியில் அவளது முகபொலிவினை பார்க்க சொல்லுங்கள். நீங்களும் பாருங்கள்.

மீண்டும் 45 வது நாள் இதேபோல் பாருங்கள். நிச்சயமாக ஒரு மாற்றத்தை உங்களால், உங்கள் பெண்ணால் உணர முடியும். அதுமட்டுமின்றி பெற்றோர்களின் ஆதரவும் அரவணைப்பும் வியப்பூட்டும் வகையில் கூடும்.

விளக்கேற்றவேண்டிய நேரம்

விடியற்காலையில் சூரியன் உதயமாவதற்குச் சற்று முன்னதாக `பிரம்ம முகூர்த்தம்’ என்கின்ற இரவின் விடியலாகத் திகழும் அருணம், என்கின்ற அருணோதய காலத்தில் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் எல்லாவித யோகத்தையும் பெறலாம்.

அதேபோல் மாலையில் சூரியன் மறைவதற்குச் சற்று முன்னதாக, பிரதோஷ காலம் என்கிற உன்னதமான காலத்தில் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால், குடும்பத்தில் செல்வம் பெருகும். சந்தோஷம் நிலவும், வேலை தேடுவோருக்கு நல்ல வேலை கிடைக்கும். புத்திர பாக்கியம் உண்டாகும். மனதுக்கு ஏற்ற வரன் அமையும். மற்றும் எல்லாவிதமான யோக பாக்கியங்களும் பெறலாம்.

பொதுவான விதிமுறைகள்
1. விளக்கில் எண்ணெய் விட்டு எத்தனை திரிகளைப் போட்டிருந்தாலும் அத்தனையும் ஏற்றிட வேண்டும். குறைந்த பட்சம் இரண்டு திரிகளாவது ஏற்ற வேண்டும்.

2. பூஜை தொடங்கும் முன் வீட்டில் சுமங்கலி குத்துவிளக்கை ஏற்றி விட்டு வணங்கிய பிறகு பூஜை செய்தால் நிச்சயம் பலன் உண்டு.

3. விளக்கு தீபம் ஏற்றும்போது முதலில் விளக்கில் நெய் அல்லது எண்ணெய் ஆகியவற்றை ஊற்றிய பிறகே பஞ்சு திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். அப்படி முறையாக ஏற்றிய தீபம் வீட்டில் உள்ள இருளை அகற்றுவதோடு, வீட்டில் உள்ளோர் அனைவரின் மன இருளையும் அகற்றி, தெளிவான சிந்தனையைத் தூண்டி, சிறந்த முறையில் செயாலாற்ற வைத்து, நிலையான அமைதியைத் தரும்.

4. இரண்டு திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது நலம்.

5. ஒரு திரி ஏற்றும் போது கிழக்கு திசை நோக்கி ஏற்றவும். நாம் ஏற்றும் திரியை பொறுத்து அதற்கு உண்டான பலன்களை அடையலாம்.

6. தீபத்தை பூவின் காம்பினால் அணைக்கவும். வாயினால் ஊதக்கூடாது. கல்கண்டை கொண்டு தீபத்தை அமர்த்தவேண்டும்.

7. தீபம் வெறும் விளக்கு அல்ல, நம் வாழ்வின் கலங்கரை விளக்கு. மங்களம் தங்கவும் இன்பம் பெருகவும் தீபம் ஏற்றுவோம். தீபமேற்றி என்றும் இறைவெளிச்சத்தில் இன்பம் காண்போம்