siruppiddy

சனி, செப்டம்பர் 26, 2020

இந்தியாவில் ஒரு கோவிலில் தங்கத்தை பிரசாதமாக வழங்கும் அதிசயம்

 

கோவில்களில் பிரசாதம் வழங்கப்படுவது என்பது சாதாரணமான ஒன்று. பெரும்பாலும் கோவில் பிரசாதங்கள் மக்கள் உண்ணக்கூடியவையாக இருக்கும். ஆனால் சில கோவில் பிரசாதங்கள் 
அப்படிப்பட்டதாக இருக்காது. சிலசமயம் விலையுயர்ந்த பொருட்கள் கூட கோவில் பிரசாதமாக வழங்கப்படலாம். ஆனால் 
இந்தியாவில் ஒரு கோவிலில் கோடிக்கணக்கான மதிப்புள்ள தங்கங்கள் பிரசாமாக வழங்கப்படுகின்றதாம்.
அந்த கோவில் பற்றி பார்க்கலாம். இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் ரத்லத்தில் உள்ள மஹாலக்ஷ்மி கோயில் அதன் பிரசாதத்திற்கு 
மிகவும் புகழ்பெற்றது. இந்த
 கோவில் ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான மதிப்புள்ள பிரசாதங்களைப் பெறுகிறது. அதில் தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் கூட அடங்கும். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு, இந்த பிரசாதத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதி பக்தர்களுக்கு பிரசாதம் வடிவத்தில் 
திருப்பித் தரப்படுகிறது.
கோவிலுக்கு வந்து இந்த பிரசாதத்தைப் பெற மக்கள் ஆயிரக்கணக்கான மைல்கள் பயணம் செய்கிறார்கள் என்று கூறப்படுகிறது. அதற்கான பயணச் செலவு பெரும்பாலும் பிரசாதத்தின் மதிப்பை 
விட அதிகமாக இருக்கும். இருப்பினும், இங்கே தங்கம் மற்றும் வெள்ளி பிரசாத் நகைகள் அல்லது விலைமதிப்பற்ற உலோகமாக 
கருதப்படுவதில்லை. இது உண்மையில் செல்வத்தின் தெய்வத்தின் ஆசீர்வாதமாகக் கருதப்படுகிறது. அது ஒருபோதும் செலவழிக்கவோ விற்கவோ படுவதில்லை.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஞாயிறு, செப்டம்பர் 13, 2020

பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு செல்வி லோவிதன் யஸ்வினி.12.09.20

 

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் செல்வப்புதல்வி யஸ்வினி  தனது ஏழாவது
பிறந்த நாளை 12.09.2020..இன்று தனது இல்லத்தில் வெகு சிறப்பாக கொண்டாடினார் .இவரை அன்பு அப்பா அன்பு அம்மா அன்புத்தங்கச்சி அன்பு ஐய்யா அப்பம்மா மார் பூட்டி -தாத்தாமார் அம்மம்மா 
மார்மாமா மார் மாமி மார்
மச்சான் மச்சாள்மார் பெரியப்பாமார் ,பெரியம்மாமார் சித்தப்பாமார் சித்தி மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்.இவரை நவற்கிரி ஸ்ரீமாணிக்க பிள்ளையார் இறை அருள் ஆசியுடன் நோய் நொடி இன்றி
அன்பிலும் அறத்திலும் நிறைந்து சீரும்சிறப்புடன் பல்கலைகளும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம்
நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நிலாவரை.கொம் இணையங்களும் வாழ்த்துகின்றது…
நாங்களும் வாழ்த்துகின்றோம் —-
செல்வி லோவிதன் யஸ்வினிக்குட்டிக்கு
பிறந்தநாள் வாழ்த்துக்கவிதை
உன் பிறந்த நாளை பார்த்து
மற்ற நாட்கள் பொறாமை
கொள்கின்றது.. பிறந்து
இருந்தால் உன்
பிறந்த நாளாக தான்
பிறந்து இருக்க வேண்டும்
என்று..
 பிறப்புகளில் உயர்ந்த
பிறப்பு மானிட பிறப்பு..
இந்த பிறப்பில் நீங்கள்
அனைத்தும் பெறவும்..
பெற்றவற்றை உலகிற்கு
பகிரவும்.. மகிழ்வுடன்
வாழ்த்துகின்றோம்.!
வாழ்க வளமுடன்
நிலாவரை.கொம் செய்திகள் >>>







வெள்ளி, செப்டம்பர் 11, 2020

அருள்மிகு ஶ்ரீ வல்லிபுர ஆழ்வார் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு பூஜை.10-09-20

 

யாழ் பருத்தித்துறை  வடமராட்சியில் - சரித்திரப் பிரசித்தி பெற்ற ஶ்ரீ வல்லிபுராழ்வார் ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு பூஜை 10-09-2020.அன்று மிகச்சிறப்பாக  பூஜை  நடைபெற்றது
புல்லாங்குழல் கொண்ட கண்ணன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்புரிந்த  காட்சி மெய்சிலிர்க்க வைத்தது 
நிலாவரை.கொம் செய்திகள் >>>




செவ்வாய், செப்டம்பர் 01, 2020

தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் தேர்த்திருவிழா,01.09.20

 

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ், வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய தேர்த்திருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ வெகுசிறப்பாக நடைபெற்றது.வரலாற்றுச் சிறப்பு மிக்கதும், 
அன்னதானக் கந்தன் என அடியவர்களால் போற்றிச் சிறப்பிக்கப்படுவதுமான செல்வச் சந்நிதியானின் மகோற்சவம் ஓகஸ்ட் 19ஆம் திகதி ஆரம்பமாகி இடம்பெற்றுவருகிறது.கொரோனா 
அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஆலய மஹோற்சவம், சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி சிறப்பாக இடம்பெற்று
 வருவதுடன் 01-09-2020.இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முத்தேர் பவனி வெகுசிறப்பாக நடைபெற்றது.இன்றைய 
தேர்த் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் கலந்துகொண்டு 
முருகப் பெருமானைப் பக்தி பூர்வமாகத் தரிசித்தனர். இந்நிலையில், மகோற்சவத்தின் பெருந்திருவிழாவான 
தீர்த்தோற்சவம் நாளை காலை இடம்பெறவுள்ளது.இதேவேளை, கொரோனா நெருக்கடி காரணமாக இம்முறை தாகசாந்தி, அன்னதானம் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதுடன், அங்கப்பிரதட்சணம், 
அடி அழித்தல், கற்பூர சட்டி எடுத்தல், காவடி எடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதற்கு
 தடை மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.அத்துடன், ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் அடையாள அட்டையை எடுத்து வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளமை 
குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


 








பிறந்தநாள் வாழ்த்து செல்வி சாந்தகுமார் சபிரா.01.10.20


யாழ் நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிசை வாசிப்பாடமாகக் கொண்ட.. 
திரு .,திருமதி. சாந்தகுமார்.தம்பதியினரின் செல்வப்புதல்வி.செல்வி. சபிரா அவர்களின் எட்டாவது    பிறந்தநாள்.01.10. 2020. இன்று 
 இவரை அன்பு அப்‌பா அம்மா அன்பு தம்பி  அப்‌பம்மா பூட்டி அம்மா ஐய்யா அம்மம்மா மாமா மாமி மச்சாள் மார் தாத்தாமார் அம்மாமார்
 பெரியப்பாமார் பெரியம்மாமார்
 சித்தப்பாமார் சித்தி மார் மாமாமார் மாமி மார் அண்ணாமார் தம்பிமார் அக்காமார்,மற்றும் நபர்கள்  இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் இறை அருள்பெற்று  அன்பிலும் அறத்திலும் நிறைந்து  பல் கலைகளும் பெற்று  நோய் நொடி இன்றி  சீரும்சிறப்புடன்  வாழ  வாழ்த்துகின்றனர் இவர்களுடன்  இனைந்து நவற்கிரி .கொம்
 நிலாவரை நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நவற்கிரி .கொம் இணையங்களும் வாழ்த்துகின்றன.
பிறந்தநாள் வாழ்த்துக்கவிதை 
பிறப்புகளில் உயர்ந்த
பிறப்பு மானிட பிறப்பு..
இந்த பிறப்பில் நீங்கள்
அனைத்தும் பெறவும்..
பெற்றவற்றை உலகிற்கு
பகிரவும்.. மகிழ்வுடன்
வாழ்த்துகின்றோம் ..
வாழ்க வளமுடன்


நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>>





திங்கள், ஆகஸ்ட் 31, 2020

தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய தேர்த்திருவிழா,31-08-20

 

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ் தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா.31-08-2020. இன்று திங்கட்கிழமை  காலை இடம்பெற்றது.
 அடுத்து காலை 8 மணிக்கு வசந்த மண்டப பூஜை 
ஆரம்பமானது.
அதனை தொடர்ந்து உள் வீதி உலா வந்த துர்க்கை அம்மன் காலை 9 மணியளவில் தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு 
அருள் காட்சி அளித்தார்.
 கொடியேற்றத்துடன் மகோற்சவ திருவிழா ஆரம்பமானது.
தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற்ற திருவிழாவை அடுத்து31-08-2020. இன்று திங்கட்கிழமைதேர்த்திருவிழா
 இடம்பெற்றது.
நாளை செவ்வாய்கிழமை   தீர்த்த திருவிழா 
இடம்பெறவுள்ளது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>





திங்கள், ஆகஸ்ட் 17, 2020

யாழ் நல்லூர் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா .17.08.20

 

 யாழ்.நல்லூர் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழாவைக்காண வரலாறு காணாத வகையில்
.வெகு விமர்சையாக 20.08.2017 இன்று இலட்சக்கணக்கான பக்தர்கள் 
வருகைத் தந்துள்ளார்கள்.
உள்நாட்டில் இருந்து மட்டுமல்லாது வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் மக்களும் இன்று யாழ்ப்பாணத்திற்கு படையெடுத்துள்ளதை 
காணக்கூடியதாக உள்ளது.
யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் தற்போது வெகு சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.
கொடியேற்றத்துடன் ஆரம்பமான நல்லூர் திருவிழா தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறுவதோடு, 24ஆம் நாளான 17-08-20.இன்று தேர்த்திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது .
அந்த வகையில் தற்போது யாழ்ப்பாணம் முழுவதும் திருவிழா களைகட்டியுள்ளது. மக்கள் அனைவரும் மிகவும் பக்தியுடன் தேரின் வடம் பிடித்து வருவதை காணக்கூடியதாக உள்ளது.
என்றுமில்லாத வகையில் யாழில் கூடியுள்ள பக்தர்களின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
இதில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவவதை  
காணக்கூடியதாக உள்ளது.
ஆலயத்தை சுற்றியும் ஏராளமான பக்த அடியார்கள் காணப்படுகின்றார்கள். தேரைச் சூழ்ந்துள்ள மக்கள் கூட்டத்தையும், வடம் பிடித்து தேரை இழுக்கும் காட்சிகளையும் பார்க்கும் போது மெய்சிலிர்க்க 
வைக்கின்றது

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 


 

சனி, ஆகஸ்ட் 01, 2020

பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி தங்கா அகிலா 01.08.2020


 யாழ் தோப்பு  அச்சுவேலியை   பிறப்பிடமாகவும்,  தற்போது  கனடாவில் வசிக்கும்   திரு திருமதி தங்கராஜா அகிலேஸ்வரி ( அகிலா )அவர்களின் ஐம்பதாவது  பிறந்த நாள் .01.08.2020..இன்று இவர்தனது பிறந்த நாளை
உற்றார்  உறவினர்
 நண்பர்களுடன்  தனது இல்லத்தில் வெகுசிறப்பாக  இன்று கொண்டாடுகின்றார்
.இவரை அன்புக் கணவர்  பிள்ளைகள் அன்பு அம்மா சகோதரர்கள் அத்தான் அண்ணா தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை
தோப்பு போதிப்பிள்ளையார்
இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம்  நிலாவரை .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  வாழ்த்துகின்றன.


வெள்ளி, ஜூலை 31, 2020

பிறந்தநாள் வாழ்த்து செல்வி சந்திரகுமார் சாருகா 31.07.20


யாழ் சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் , நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்டிருக்கும் திரு திருமதி சந்திரன், நளாயினி, தம்பதிகளின் செல்வப்புதல்வி சாருகா அவர்களின் பிறந்தநாள் 31-07-2020 இன்று  பிறந்தநாளை தனது  இல்லத்தில் கொண்டாடுகிறார். சாருகாவை அன்பு அப்பா,
அன்பு அம்மா மற்றும்
மாமா  மாமி மார் குடும்ப உறவுகள்  உற்றார்  உறவினர்கள் நோர்வே யேர்மன்  லண்டன் சுவிஸ் கனடா சிறுப்பிட்டி வாழ்  உறவுகள் அனைவரும் வாழ்த்துகின்றனர்  இவர் களுடன் 
   இணைந்து   நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ இணையம்  நவக்கிரி,கொம்  நிலாவரை.கொம் 
நவற்கிரி .கொம் இணையங்களும் இவரை சிறுப்பிட்டிவயிரவர்  
இறை ஆசியடன்
 நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும்  சகல கலைகளும்  பயின்று  பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க  வாழ்க வென வாழ்த்துகின்றன.
நிலாவரை.கொம் செய்திகள் >>> >>>>


வெள்ளி, ஜூலை 17, 2020

பிறந்தநாள் வாழ்த்து திரு துரைராஜா பாலையா 17.07.20

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  நவற்கிரியை வசிப்பிடமாக கொண்ட  திரு . துரைராஜா .பாலையா
அவர்களின் அறுபத்திஏழாவது பிறந்தநாள் இன்று 17..07.2020.இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,
பேரப்பிள்ளைகள், பூட்ட ப்பிள்ளைகள் சகோதரர்கள் சகோதரிகள் மருமக்கள் பெற மக்கள் மற்றும் நவற்கிரி நண்பர்கள் உறவினர்கள் ,வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து இவரை நவற்கிரி
 ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  ,
இறைஅருள் பெற்று  அன்பிலும் அறத்திலும் நிறைந்து  பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று நோய் நொடி இன்றி  பல்லாண்டு பல்லாண்டு சீரும் சிறப்புடனும் நலமுடனும் வாழ வாழ்த்துகின்றனர் .இவ்வுறவை நவக்கிரி http://lovithan.blogspot.ch இணையமும் 
நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம்  இணைய உறவுகளும் ஒன்றிய உறவுகளும் வாழ்த்துகின்றன
.வாழ்க  வளமுடன் 

இங்கு அழுத்தவும் நவக்கிரி.கொம் செய்தி >>>>


தமிழ்நாடட்டில் உலகிலேயே உயர்ந்த கட்டிடம் தஞ்சை பெரிய கோவில்

தமிழ்நாடட்டில் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு  இந்தத் #தமிழ்_மண்தான், இங்கு மட்டும் நாற்பாதயிரம் கோயில்கள் உள்ளன. அவ்வளவு கோயில்கள் ஏன்? அவசியம் என்ன? 
சோழர் காலத்தில் தமிழ்நாடு தான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு.
*சுமார் 40,000 கோயில்களை சோழர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் கட்டினார்கள். அன்று உலகிலேயே உயர்ந்த கட்டிடம் தஞ்சை பெரிய கோவிலும், கங்கை கொண்ட சோழபுரமும்தான்.*
அப்போது வட அமெரிக்கா தென் அமெரிக்கா கிடையாது. இலண்டன் ஒரு சிறு மீன்பிடிக்கும் கிராமமாக 1066 -இல் நிறுவப்பட்டது.
*#தஞ்சை பெரிய கோபுரம் முழுவதும் தங்கத்தால்_போர்த்ப்பட்டது. இது பற்றிக் கல்வெட்டும் உள்ளது. இந்தத் தங்கப் போர்வை 1311 - ஆம் வருடம் மாலிக்கபூரின் படைகளால் கொள்ளையடிக்கப்பட்டு, 500 யானைகள் மேல் எடுத்துச் செல்லப்பட்டது.*
இவ்வளவு கோவில்கள் கட்டுவதற்கு எங்கிருந்து பணம் வந்தது?
*எல்லாம் கடல் வாணிபம் ஏற்றுமதிதான். ஜப்பான் நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது. ஆனால் ஏற்றுமதி வியாபாரம் மூலம் அவர்களுக்குத் தங்கம் கிடைக்கிறது. அதே போல் சோழ நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது. இரும்பு சாமான்கள், துணிகள், கைவினைப் பொருட்கள், தானிய ஏற்றுமதி மூலம் தங்கம் கிடைத்தது.*
உலகிலேயே ஒரே சீராக 80 இலட்சம் ஏக்கர் விளை நிலம் காவிரிப் படுகைப் பகுதியில்தான் அமைந்துள்ளது. எங்கும் மூன்று போகச் சாகுபடிக்குக் காவிரியில் நீர் வந்து கொண்டிருந்தது.
*வியாபாரத்திலும், ஏற்றுமதியிலும், விவசாயத்திலும் கிடைத்த பணத்தை - தங்கத்தை சோழர்கள் படை பலத்தைப் பெருக்கிக் கொள்ள பயன்படுத்தினர்.*
மலேயா காடுகளிலிருந்தும், மைசூர் காடுகளிலிருந்தும் யானைகள் பிடித்து வரப்பட்டன.
பர்மாவிலிருந்து தங்கம் கொடுத்து குதிரைகள் வாங்கப்பட்டன. 
*ஏன் கோவிலை கட்டினார்கள்?*
*தமிழர்கள் ஏன், கோயில் கோயில் என்று அதைச் சுற்றியே வருகிறோம் ?
தமிழகத்தை ஆண்ட பெரும்பாலான அரசர்கள் அவரவர் ஆண்ட பொழுது ஏன் மருத்துவமனை கட்டவில்லை, கல்விச்சாலை அமைக்கவில்லை ஆனால் கோயில்களை கட்டினார்கள்.
*கோயில்கள் எப்பொழுதெல்லாம் கட்டப்பட்டன ?
மக்களுக்கு பிரித்து கொடுக்காமல், அரசன், அரசின் நிலங்களை, ஏன் கோயில்களுக்கு மானியமாக எழுதி வைத்தான் ?
*உலகின் குருவாக தமிழகம் ஆனது எப்படி ?
எந்த ஒரு அரசும் பட்ஜட் போடும் பொழுது வரி வசூல் என்ன, அதில் அரசு நடத்த அதிகாரிகளுக்கு ஆகும் செலவு, மக்கள் நல திட்டங்களுக்கு ஆகும் செலவு ன்னு வரவு செலவை வைத்து தன்னிறைவு திட்டத்தை அடையத்தான் நிதிநிலை அறிக்கை போடுவார்கள்.
இதையேதான் தமிழக கோயில்கள் செய்தன.
*கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் ன்னு அதைத்தான் சொல்லி வெச்சாங்க.*
மன்னன் கோயில் கட்ட ஆரம்பித்தவுடன், கட்டுமான பணிக்கு அந்த ஊரை சுற்றி உள்ள கட்டுமான கலைஞர்கள், சிற்ப கலைஞர்கள், கல் தச்சர்கள், கட்டுமான பொருட்களான செங்கல், சுண்ணாம்பு போன்றவற்றை உற்பத்தி செய்வோர், அதை ஓரிடத்தில் இருந்து கோயில் கட்டும் இடத்திற்கு கொண்டு செல்லும் போக்குவரத்து, வர்ணம் அடிக்க, ஓவிய கலைஞர்கள், இப்படி அனைவருக்கும் வேலை வாய்ப்பு, அதுவும் அரசரால் கொடுக்கப்படும், அரசு வேலை.
*கோவிலுக்கு மானியமாக கொடுக்கப்படும் நிலங்கள், குத்தகை மூலமாக விவசாயிகளுக்கு விடப்பட்டு அதன் மூலம் விவசாய உற்பத்தி, அதற்கு ஒரு சமூகம்,  பாண்ட மாற்று முறையில், தன்னிறைவு பெற்ற பொருளாதாரம்.*
கோவிலுக்கு கொடுக்கப்பட்ட பசுமாடுகள், அதை கவனித்தல், அதற்கு ஒரு சமூகம், இதனால்  கோயிலுக்கும் அந்த கிராமத்தாருக்கும் பால் சார்ந்த பொருட்கள்.
*நெய்வேத்தியம் சமைக்க சமையல் கலைஞர்கள். அதற்கு ஒரு சமூகம்.*
சமையல் செய்ய பாத்திரங்கள் செய்ய மண்பானை செய்வோர் மற்றும் உலோக பாத்திரம் செய்வோர், அதற்கு ஒரு சமூகம். அவர்களுக்கு  தொடர்ந்து வேலை.
*நந்தவனம் மூலம் தெய்வத்திற்கு பூ மாலை மற்றும் அலங்கார சேவை செய்ய நந்தவனம் காப்போருக்கு வேலை. அதற்கு ஒரு சமூகம். அவருக்கு தொடர்ந்து வேலை இருக்க, அதற்கேற்ப கோவில் உற்சவங்கள்.*
மங்கள இசை இசைக்கும் கலைஞர்கள் ஓர் சமூகம். கூத்து கலைஞர்கள் என, 
அவர்களுக்கும் வருட மானியம் மற்றும் வேலை. மாலை வேளைகளில் ஆன்மீக கச்சேரி என்று மனதிற்கு இனிய பொழுது போக்கு நிகழ்ச்சிகள். 
*தெய்வத்தின் வஸ்திரங்கள் நெய்ய ஒரு சமூகம்.*
அந்த வஸ்திரங்களை துவைக்க ஓரு சமூகம், அவருக்கும் தொடர்ந்து கோவில் மானியம் மூலம் வேலை.
*கோயிலை சுத்தமாக வைத்துக்கொள்ள ஒரு தேவை, அதை செய்ய ஒரு சமூகம். அவருக்கும் கோயில் மூலம் மானியம், வருட வருமானம்.*
இவை அனைத்தையும் நிர்வாகம் செய்ய, கணக்கு பார்க்க, ஒரு சமூகம்.
*இவர்கள் அனைவரும் அவரவர் வேலையை பார்க்க, அதன் மூலம் வாழ்வாதாரம் பெறவும், கோயில் ஒரு மிகப்பெரிய தொழிற்சாலை. ஆன்மீகம் ஒட்டி வாழ்வாதாரம்.*
பெரு வெள்ளம் வந்து ஊரே மூழ்கி போனாலும், கோயிலின் கோபுரத்தில், கலசம் மூலம், செறிந்த விஞ்ஞான அறிவுடன், அதனுள் 12 வருடம் வரை கெடாத அந்த கிராமத்தில் மண்ணுக்கேற்ப விளையும் விளை பொருட்களின் விதை பொருட்கள்.
*12 வருடத்திற்கு ஒரு முறை அதை மாற்றி அமைத்து, மராமத்து பணிகள் மேற்கொள்ள மேற் சொன்ன அனைவருக்கும் ஒரு கூட்டு வேலை வாய்ப்பு.*
இப்படி அவர் அவருக்கு தெரிந்த பணி, அதை சார்ந்த சமூகம், ஒன்றிணைந்து தன்னையும் காப்பாற்றிக்கொண்டு, தன்னிறைவு வாழ்க்கை என வாழ்வதற்கு கட்டமைக்கப்பட்டதே, நம்  கோயில்கள்.
*ஊருக்கு ஒரு கோயில், அதை சுற்றிலும் அனைத்து சமூகம்,* 
அந்த அந்த ஊரை சுற்றி உள்ள இயற்கை வளங்கள் பாதுகாக்கபட்டு, மூலிகை மூலம் வைத்தியம், அதற்க்கென ஒரு சமூகம் என, 
ஊரை சுற்றியே, ஓர் தன்னிறைவு வாழ்க்கை. 
இப்படி அமைக்கப்பட்டது தான் நம் பொருளாதார கட்டமைப்பு.
*மாத சம்பளம் பணமாக, பணத்திற்கு பொருள், அதன் விலை ஏற்ற இறக்கம், பண வீக்கம், இவை எதுவுமே சாராமல் ஓர் தன்னிறைவு வாழ்க்கை.* 
தெய்வங்களுக்கு உயிரூட்டி, அந்த தெய்வங்கள் அங்கே வாழ்வதாகவும், அந்த கோயிலின் சொத்துக்கள், அந்த தெய்வங்களின் சொத்துக்கள் என்றும்,
உயிருள்ள ஒருவர், எப்படி தினமும் குளிப்பாரோ, உடை உடுத்தி கொள்வாரோ, தினமும் உணவு உண்பாரோ, நம் வாழ்வாதாரத்திற்கு உதவும் ஒருவரை நாம் எப்படி போற்றி கவனிப்போமோ, அப்படி  அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக, அனைவரின் சார்பாக,  பூஜைகளை கவனிக்க ஒரு சமூகம்.*
இப்படி ஒரு கோயிலை வைத்து, ஆன்மீகம் மூலமாக ஒரு *தன்னிறைவு பொருளாதாரத்தை உலகிற்கு வாழ்ந்து காட்டியதாலேயே, தமிழகம் உலக குருவாக திகழ்ந்தது.
வாழிய பைந்தமிழ் நாடு..
தமிழ்நாடட்டில்  உலகிலேயே உயர்ந்த கட்டிடம் தஞ்சை பெரிய கோவில் 

நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஆலய நுழைவாயிலுள்ள வாசற்படியை ஏன் மிதித்து செல்லக் கூடாது

கோவிலில் தினந்தோறும் நடத்தப்பட்டு வரும் பூஜைகளினாலும், மந்திர உச்சரிப்புகளாலும், மணி, மேள தாளம் மற்றும் நாதஸ்வரம் போன்ற சத்தங்களாலும் பல அற்புத சக்திகள் கோவில் முழுவதும் இருக்கிறது என்று விஞ்ஞான ரீதியாக 
நிரூபிக்க உண்மை. இப்படி பல 
அற்புதங்கள் நிறைந்த கோவிலின் நுழைவாயிலில் உள்ள வாசற்படியை எப்படி கடந்து செல்ல வேண்டும் என்பது பலரது கேள்வியாக உள்ளது.
கோவிலுக்குள் செல்லும் அனைவரும் கால்களை
 நன்கு கழுவி விட்டு செல்வது வழக்கம். ஆனால், அப்படி செய்யும் அவர்களுக்கு கோவிலின் வாசற்படியை மிதித்து 
செல்ல வேண்டுமா அல்லது தாண்டி செல்லவேண்டுமா 
என்று யோசிப்பது 
வழக்கம். அப்படி யோசிக்கவே தேவையில்லை. ஏனென்றால், கோவியிலுக்குள் செல்லும் அனைவரும் வாசற்படியை தாண்டி தான்
 செல்ல வேண்டும்.
அப்படி தாண்டி செல்வதற்கு முன்பு ஒவ்வொருவரும், குனிந்து நமது வலது கை விரல்களால் படிக்கட்டை தொட்டு புருவ மத்தியின் ஆக்ஞா சக்கரம் உள்ள இடத்தில் அழுத்த வேண்டும். அப்படி 
செய்யும் போது நம் உடலானது நேர்மறையான ஆற்றல்களை கிரகிக்கும். இதையடுத்து
, நாம், கோவிலுக்குள் சென்றதும் நம் பாதம் வழியாக கோவிலில் உள்ள
 நேர்மறை ஆற்றல்களானது நம் உடலுக்குள் ஊடுருவ ஆரம்பிக்கும். இதன் காரணமாக நாம் அனைவரும் கோவிலுக்குள் செல்லும் போது கால்களை நன்கு கழுவிவிட்டும், கோவில் நுழைவாயிலில் உள்ள படிக்கட்டை தாண்டியும் செல்ல வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



சனி, மே 23, 2020

திருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா.23-05-20

யாழ் நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக உள்ள திரு,திருமதி, தியாகராஜா  
(தேவன் தர்மா)..தம்பதியினரின் 
திருமண நாள் 23-05-2020.இன்று  39வது வருட திருமண நாள்
காணும் இவர்களை அன்பு அம்மா பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மாமா மாமி மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி  இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள்   
வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து 

 திருமண [கல்யாண] வாழ்த்து கவிதை..

தேவன் வகுத்த இந்த விவாக சாசனம் நடைபெறவிருக்கும் சுபயோக சுபதினத்தில் அனைத்து நல்ல உள்ளங்களும் வாழ்த்தி வாழ்க்கை வளம் பெற பேரன்போடு 
சூரியனும் சந்திரனும் சாட்சியாய் நின்று சொந்தங்களும் பந்தங்களும் சுற்றத்தாரும் தொலை தூரத்து உறவினர்களும் நண்பர்களும் நெருக்கமான நேசங்களும் ஒன்று சேர வாழ்த்தும் பொன்னான இந்த திருமண விழா தம்பதியனர்களுக்கு சிறப்பு வாய்ந்ததாக அமையட்டும்

அன்பை அறிவை அளவின்றி அளித்து இரு உறவுகள் இதயங்களை அன்பு பாச நேசங்களால் இடம் மாற்றி கொள்ளும் சிறந்த நிகழ்வே திருமணம் … ஆனந்தம் பொங்கி நூறாண்டுகள் நீடூழி  வாழ 

இறை  ஆசிபெற்று  பெற்று

இல்லறம் இனிதாய் செம்முற நடத்தி
இறைவன் ஆணையிட்ட விதியின் படி இணையவிருக்கும் இரு நல்ல இதயங்களின் இல்லற விழாவான இந்த திருமண நன்னாள் நல்லபடியாக அமைய வாழ்த்துகிறோம்  சிறப்பான திருமண 
தின வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன் வாழ்த்தும் நவற்கிரி. .கொம்  நிலாவரை .கொம்  நவற்கிரி http://lovithan.blogspot.ch/ நவக்கிரி .கொம் மற்றும் 
உறவு இணையங்களும் ,நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையர்
 மற்றும் 
அப்பா வயிரவர் மேல்மருவத்தூர் அம்மன் அருள்பெற்று மிகுந்த சீரும்சிறப்புடன்  வாழ்வில் எல்லா சுகங்களோடும்,நலன்களோடும், நீடித்த ஆயுளுடனும் பல்லாண்டு பல்லாண்டுகாலம் நீடுழி வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றோம் 
. வாழ்கவளமுடன்

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



செவ்வாய், ஏப்ரல் 28, 2020

வலம்புரிவிநாயகர் விநாயகனே வினைதீர்ப்பவனே

நமக்கெல்லாம் தெரிந்த விநாயகரும்
(வலம்புரிவிநாயகர், இடம்புரி_விநாயகர்)
மற்றும் அவரைப்பற்றி தெரியாத ரகசியம் தொடர்பான அரிய பதிவு:
ஆன்மீகத்தில் விநாயகர் வழிபாடு தொடர் பான ஒரு விஷயத்தை இங்கே உங்களுக்காக பதிவிடுகிறேன்.
மனித மூளை வலப்பகுதி,இடப்பகுதி என இரண்டு பிரிவுகளாக உள்ளது என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
இந்த மூளையின் இடது, மற்றும் வலது பாகங்கள்தான் நம் உடலின் அத்தனை உறுப்புக்களின் செய்கைகளுக்கும் காரணம்.
இடப்பக்க மூளை, உடலின் வலது பாகத்தையும், வலப்பக்க மூளை, உடலின் இடது பாகத்தையும் கட்டுப்படுத்துகிறது என்கிறது விஞ்ஞானம்.
இதையே நம் சாஸ்திரம் பிங்கலை, இடங்கலை, நாடிகள் என வரையறுக்கிறது.
நமது உடலின் செயல் வலது ,இடது என பிரிக்கப்பட்டு செயல்படுகிறது.
உங்கள் வலது பக்க மூளை செயல்படும் பொழுது உங்கள் இடது நாசி துவாரத்தில் சுவாசம் வரும். அதே போல இடது பக்க மூளை இயங்கும் பொழுது வலது நாசியில் சுவாசம் வரும்.
இங்கு நாடி சாஸ்த்திரத்தை பற்றி விரிவாக காண்பதல்ல நம் நோக்கம். இந்த நாடி சிந்தாந்தத்தை குறிக்கும் வகையில் தான் விநாயகரின் துதிக்கையை வலம்புரியாகவும் இடம்புரியாகவும் நமது முன்னோர்கள் அமைந்திருக்கின்றார்கள். இனி கோவிலில் விநாயகரை வணங்கும் பொழுது உங்களின் நாசியில் வரும் சுவாசத்தை கவனியுங்கள்.
விநாயகரின் துதிக்கை எந்த பக்கத்தில் இருக் கிறதோ அந்த பக்கம் உங்களின் நாசியில் சுவாசம் வரும்.
வலம்புரி விநாயகராக இருந்தால் உங்கள் வலது நாசியிலும், இடம்புரி விநாயகராக இருந்தால் உங்கள் இடது நாசியிலும் சுவாசம் வருவதை காணலாம். வெளியே இருக்கும் நான் தான் உன் உள்ளேயும் இருக்கிறேன் என பிள்ளையார் கூறும் விஷயம் இது.
என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?
விநாயகர் விக்ரஹத்தின் இந்த அரிய இரகசியத்தை முயற்சி செய்து பார்த்து உணர்ந்து கொள்ளவும்.
வலது நாசியின் வழியாக உள்ளே செல்லும் காற்றிற்கு சூரிய கலை என்றும்; இடது நாசி யின் வழியாக உள்ளே செல்லும் காற்றிற்கு சந்திர கலை என்றும் நமது முன்னோர்கள் பெயர் சூட்டியுள்ளனர்.
இந்த இரண்டு சுவாசங்களுக்கும் தனித்தனிப் பண்புகளும் வெவ்வேறு வகையான செயல்பாடுகளும் உள்ளன.
#வலது_நாசிக்_காற்று (சூரிய கலை)
1-உடலுக்குத் தேவையான வெப்ப சக்தியைத் தருகின்ற பிராணன் இதுவே.
2-வலது நாசியின் வழியாக சுவாசம் நடைபெறும் காலகட்டத்தில் உடலின் வெப்ப நிலை சற்றே உயரும்.
3-உடல் சுறுசுறுப்படையும்; சோர்வு அகலும்.
4-உடலின் வலிமை அதிகரிக்கும்.
5-மூளையும் உடலும் பரபரப்பாக இயங்கும்.
6-இந்த இரண்டு மணி நேரத்தில் நிதானம் குறைவாகவும், வேகம் அதிகமாகவும் இருக்கும்.
#இடது_நாசிக்_காற்று (சந்திர கலை)
1-உடலைக் குளிர்விக்கும் தன்மை கொண்டது.
2-சந்திரனைப் போன்றே இந்த மூச்சுக் காற்றும் குளுமையானதாகும்.
3-இடது நாசி வழியே சுவாசம் நடைபெறும் வேளையில் உடலின் வெப்ப நிலை சற்றே குறைந்து, உடல் குளிர்ச்சியடையும்.
4-பரபரப்புத் தன்மை குறைந்து, மனதிலும் உடலிலும் ஒரு 
சாந்தத் தன்மை உருவாகும்.
5-மூளை அமைதியாக சிந்திக்கத் துவங்கும்.
6-அவசரத் தன்மை மறைந்து, நிதானமான மனநிலை நிலவும்.
விநாயகப்பெருமானின் விக்ரஹத்திற்கு உங்கள் சுவாசம் சம்பந்தப்பட்ட சூரிய கலை மற்றும் சந்திர கலைகளை மேம்படுத்தும் இத்தகைய ஆற்றல் இருப்பதால் தான் அவரை முதலில் வணங்க வேண்டும் என்கிறார்கள்.

பிராணன் (சுவாசம்)இல்லாமல் நாம் ஏது? அத்தகைய பிராணனை சுத்தப்படுத்தவே அவரை அரசமரத்தடியில் அமரச்செய்து அவரை வழிபடுவதன் மூலம் அரசமரம் நாளொன்றுக்கு வெளியிடும் 2400 கிலோ பிராண வாயுவை சுவாசித்தும், கருப்பை கோளாறுகளை போக்கியும் அரசமரக் காற்றினால் மூளையின் செயல்பாடுகளை தூண்டி, மன அமைதியை பெறுகின்றோம்.
விநாயகரின் விக்ரஹ மகிமையை எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் பிள்ளையாருக்கு பிறப்பில்லை .
அதனால் தான் நாம் விநாயகர் ஜெயந்தி என கொண்டாடமல் விநாயகர் சதுர்த்தி என கொண்டாடுகிறோம். ..!
ஆவணி மாத சுக்லபக்‌ஷ சதுர்த்தி திதி பிரணவ மந்திரத்தின் நாளாக , பிரணவ ரூபனின் நாளாக கொண்டாடுகிறோம்.
எனவே நாம்...! விநாயகப்பெருமானின் விக்ரஹத்திற்கு நமது சுவாசம் சம்பந்தப் பட்ட சூரிய கலை மற்றும் சந்திர கலைகளை மேம்படுத்தும் ஆற்றல் இருப்பதால் அவரை வணங்கி ஞானத்தின் வழியில் பயணம் செய்வோம்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

         

சனி, மார்ச் 14, 2020

நாம் இறை வழிபாட்டில் தேங்காய் உடைக்கப்படுவதன் தத்துவம் என்ன

தேங்காயின் அமைப்பில் வேறுசில தத்துவங்களும் சொல்லப்படுகின்றன. தேங்காயின் மேல் உள்ள கடுமையான ஓடு மனிதனின் அறியாமை மற்றும் கர்வம்.  அது மாயையாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது. அதனுள் இருக்கும் வெண்மையான பருப்பு தூய்மையான 
ஞான நிலை அல்லது ஆத்மஞானம். உள்ளே இருக்கும் நீர் ஆத்மஞானத்தால் விளையும் பரமானந்தம். 
அறியாமை, கர்வம், மாயை என்ற கெட்டியான ஓடு உடைந்தால் மட்டுமே ஆத்மஞானம் கிடைக்கும், அதனுடனேயே இருக்கும் பரமானந்த நிலையை மனிதன்  பருக முடியும் என்கிற தத்துவம் தேங்காய் உடைப்பதன் மூலம் நினைவுபடுத்தப்படுகிறது. உள்ளே
 இருக்கும் ஆத்மஞானத்தையும், பரமானந்த நிலையையும்  ஒருவன் அறிய முடியாமல் என்றுமே மாயை மிகவும் உறுதியாக இருந்து தடுத்துக் கொண்டிருக்கிறது என்பதை சுட்டிக் காட்டுவதாக
 தேங்காய் இருக்கிறது.
சிவபெருமானுக்கு மூன்று கண்கள் இருப்பதைப் போலத் தேங்காய்க்கும் மூன்று கண்கள் இருப்பது, அதற்குரிய 
மிக முக்கியமான சிறப்பு. இரண்டு 
கண்களுடன்  பிறந்த மனிதன் நன்றாகப் பக்குவப்பட்ட பின்னர் அகக்கண் அல்லது ஞானக் கண்ணைப் பெறுகின்றான். அதனால் பண்பட்டு பக்குவப்பட்டு அடையும் ஞான  மனநிலைக்கும் கூட தேங்காய் ஒரு குறியீடாக உள்ளது. அதனால் தான் மூன்று கண்களுடன் இருக்கும் தேங்காய் 
இறைவழிபாட்டுக்கு 
உகந்ததாக  கருதப்படுகிறது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


திங்கள், பிப்ரவரி 24, 2020

ஏழரைச் சனியிடம் சிக்கிய ராசிக்கு காத்திருக்கும் திடீர் விபரீத ராஜயோகம்

மார்ச் மாதம் சூரியன் கும்பம், மீனம் ராசிகளில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசியில் குரு, கேது, செவ்வாய், மிதுனத்தில் ராகு மேஷம் ராசியில் சுக்கிரன் மகரம் ராசியில் சனி , கும்பம் ராசியில் புதன் வக்ர
 நிலையில் இருக்கிறார்.இந்த கிரகங்களின் சஞ்சாரம் ராசி மாற்றங்களினால் விருச்சிகம் மற்றும் தனுசு ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.விருச்சிக ராசி:விருச்சிக ராசிக்கு 
கிரகங்கள் சஞ்சாரத்தை பார்த்தால் நான்காம் 
வீட்டில் சூரியன் புதன், இரண்டாம் வீட்டில் கேது, செவ்வாய், குரு, மூன்றாம் வீட்டில் சனி, ஆறாம் வீட்டில் சுக்கிரன் என 
கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. 
சனி சந்தோஷமாக 
இருக்கிறார்.மாணவர்களுக்கு ரொம்ப நல்ல மாதம். பிசினஸ் செய்பவர்களுக்கு ரொம்ப நல்ல மாதம். மாத 
தொடக்கத்தில் சுக்கிரன் ஆறாம் வீட்டில் இருப்பதால் கணவன் மனைவி உறவில் விட்டுக்கொடுத்து போங்க.தேவையில்லாத வீண் விவாதங்களை தவிர்த்து விடுங்கள். வம்பு வழக்குகளை 
தவிர்த்து விடுங்கள்.
மார்ச் 22ஆம் திகதி உங்க ராசிநாதன் செவ்வாய் இரண்டாம் வீட்டில் இருந்து மூன்றாம் வீட்டிற்கு சென்று உச்சம் பெற்று அமரப்போகிறார்.மூன்றாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ள சனியோடு செவ்வாய் உச்சம் பெற்று இணைகிறார். சகோதர சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும். பணவரவு அதிகமாகும்.புதிய தொழில் தொடங்கலாம். சிலருக்கு நல்ல வேலைகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவிகள் கிடைக்கும். மகரம் ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாயின் பார்வை
 மேஷம் ராசியில் இருக்கும் சுக்கிரன் மீதும் விழுவதால் காதல் மலரும். காதல் உறவில் கவனம் தேவை
குரு பகவான் மாத இறுதியில் அதிசாரமாக மூன்றாம் வீட்டிற்கு செல்கிறார். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்க. மாத இறுதியில் சுக்கிரன் ஆறாம் வீட்டில் இருந்து ஏழாம் வீட்டிற்கு 
சென்று சஞ்சரிக்கும் காலத்தில் சந்தோஷம் அதிகமாகும்.கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகமாகும். சுக்கிரன் பார்வை உங்க ராசியின் மீது விழுவதால் இந்த மாதம் நீங்க ரொம்ப 
பொறுமையாக இருங்க.
நிதானமாக இருந்தால் நிறைய நல்லது நடக்கும் ரொம்ப உணர்ச்சிவசப்படாதீங்க. திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை
 இந்த மாதம் வேண்டாம்.
தனுசு ராசி:மார்ச் மாதம் உங்க ராசிக்கு கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் ராசியில் குரு, கேது, செவ்வாய், இரண்டாம் வீட்டில் சனி, சூரியன்,புதன் 3ஆம் வீட்டிலும் சுக்கிரன் ஐந்தாம் வீட்டிலும் சஞ்சரிக்கின்றனர்
.ராகுவின் சஞ்சாரம் ஏழாம் வீட்டில் இருக்கிறது. இந்த மாதம் உங்க ராசிக்கு யோகம் தரக்கூடிய புதன் வக்ர 
நிலையில் இருந்து வக்ர நிவர்த்தி அடைகிறார்.வேலையில் நல்ல மாற்றம் வரும். புதனின் சஞ்சாரம் உங்களுக்கு யோகத்தை கொடுக்கும். சூரியன் உ
ங்க ராசிக்கு மாத முற்பகுதியில் முயற்சி ஸ்தானமான 
மூன்றாம் வீட்டிலும் மாத பிற்பகுதியில் 
நான்காம் வீட்டிலும் சஞ்சரிக்கிறார்.பாக்ய ஸ்தான அதிபதி 
சூரியன் நான்காம் வீட்டில் சஞ்சரிக்கும் போது சுகங்களை கொடுப்பார். சுக்கிரன் உங்களுக்கு சாதகங்களை செய்ய மாட்டார். என்றாலும் செவ்வாயின் பார்வை சுக்கிரன் மீது விழுவதால் கொஞ்சம் எச்சரிக்கையாக 
இருப்பது அவசியம்.
மாத இறுதியில் குரு உங்க ராசிக்கு இரண்டாம் வீட்டிற்கு செல்கிறார். சுப பேச்சுக்கள் ஆரம்பிக்கலாம். திருமண பேச்சுவார்த்தைகள் சுபமாக நடைபெறும்.குடும்பம் குதூகலமாக இருக்கும். தடைகள் இடைஞ்சல்கள் நீங்கும். வேலை இல்லாதவர்களுக்கு 
நல்ல வேலை கிடைக்கும். மாணவர்களுக்கு ரொம்ப நல்ல மாதம்.நினைவாற்றல் அதிகமாகும். உயர்கல்வி
 படிக்க யோகம் வரும். மாத பிற்பகுதியில் நிறைய நன்மைகள் நடக்கும். உடல் ஆரோக்கியம் அதிகமாகும். உடல் உபாதைகள் நீங்கும். மார்ச் மாதம் தனுசு ராசிக்காரர்களுக்கு யோகமான மாதமாக அமையும்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>