siruppiddy

வெள்ளி, ஜனவரி 28, 2022

நமக்கு செல்வத்திற்கு உரிய மகாலட்சுமியை வழிபட உகந்த வெள்ளிக்கிழமை வழிபாடு

<

செல்வத்திற்கு உரிய மகாலட்சுமியை 24 வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து வழிபட்டு வந்தால் வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கும்.பொதுவாக வெள்ளிக்கிழமை என்பது அம்மனுக்குரிய நாளாகும். பிற நாட்களை காட்டிலும் இந்த நாள் புனிதம் நிறைந்த நாளாகும்.
எனவே, இந்த நாளில் ஒரு செயலை தொடங்கினால் அது வெற்றியாகவே அமையும். நல்லதொரு தொடக்கத்திற்கு உகந்த கிழமை தான் வெள்ளிக்கிழமை.வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலில் உள்ள தாயாருக்கு அபிஷேகத்திற்கு தேவையான பசும்பாலை வழங்கினால் பண வரவு உண்டாகும். பச்சை வளையலை தாயாருக்கு அணிவித்திட 
செல்வம் பெருகும்.
வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி செந்தாமரை இதழ் கொண்டு அர்ச்சிக்க தனலாபம் கிடைக்கும்.மேலும், வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் பசுவிற்கு உணவளிக்க செல்வம் சேரும்.
வெள்ளிக்கிழமைகளில் மாலை வேளையில் சுத்தமான சாம்பிராணி கொண்டு வீடு முழுக்க புகை போடுவதன் மூலம் வீட்டில் ஏதேனும் துர் சக்திகள் இருந்தால் விலகி விடும்.
அதோடு வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். இதன் மூலம் வீட்டில் உள்ள அனைவருக்கும் புத்துணர்வு கிடைக்கும்.அரசமரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகருக்கு வெள்ளிக்கிழமை அன்று 11 தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் பண வரவு அதிகரிக்கும்.
இதேபோல் அரசமரத்தை 11 முறை சுற்றி வருவதும் மிகச் சிறந்த
 நற்பலன்களை தரும்.
வெள்ளிக்கிழமைதோறும் குபேர விளக்கில் தாமரை திரி இட்டு விளக்கேற்றி வந்தால் குபேரனின் அருள் கிடைக்கும்

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>


செவ்வாய், ஜனவரி 18, 2022

உங்க வீட்டில் மாதம் தோறும் பௌர்ணமி நாளில்இதை செய்ய மறக்காதீங்க

மாதம் தோறும் பௌர்ணமி நாளில் வீட்டில் விளக்கேற்றி வழிபாடு செய்துவருவது மிகச் சிறந்த பலன்களை தரும். அந்த வகையில் ஒவ்வொரு மாதத்திலும் வரும் பௌர்ணமிகளுக்கு ஒவ்வொரு பலன்கள் உண்டு.பூஜைகள் அவரவர் குடும்ப வழக்கப்படி செய்யலாம் என்ற போதிலும் விளக்கேற்றி வழிபாடு செய்வது சிறப்பான பலன்களை 
தரவல்லது.
எல்லா பௌர்ணமிகளுமே சிறப்பு வாய்ந்தவை என்ற போதிலும் நம் வினைகளுக்கும், தேவைகளுக்கும் ஏற்ப குறிப்பிட்ட தினத்தில் வழிபாடு செய்து வர வாழ்வில் மேன்மை அடையலாம். அதன்படி,
சித்ரா பௌர்ணமியில் விரதமிருந்து விளக்கேற்றி வழிபட்டால் தானியம் கிடைக்கும்,வைகாசி பௌர்ணமியில் விரதமிருந்து விளக்கேற்றினால் திருமணம் கைகூடும்,ஆனி பௌர்ணமியில் விளக்கேற்றினால் குழந்தை பாக்கியம் கிட்டும்,
ஆடி பௌர்ணமியில் விளக்கேற்றினால் வளமும் நலமும் அதிகரிக்கும்,ஆவணி பௌர்ணமியில் விளக்கேற்றினால் செல்வம் பெருகும்,புரட்டாசி பௌர்ணமியில் விளக்கேற்றினால் லட்சுமி கடாட்சம் நிறையும்,ஐப்பசி பௌர்ணமியில் விளக்கேற்றினால் பசிப் 
பிணிகள் நீங்கும்,
கார்த்திகை பௌர்ணமியில் விளக்கேற்றினால் புகழ் ஓங்கும்,மார்கழி பௌர்ணமியில் விளக்கேற்றினால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.,தை பௌர்ணமியில் விளக்கேற்றினால் நன்மைகள் அதிகரிக்கும்.,மாசி பௌர்ணமியில் விளக்கேற்றினால் துன்பங்கள் விலகும்,பங்குனி பௌர்ணமியில் விளக்கேற்றினால் தர்மம் 
செய்த பலன் கிட்டும்,

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>


வெள்ளி, ஜனவரி 14, 2022

பிறந்தநாள் வாழ்த்து திரு ஐயாத்துரை ராகுலன் 14.01.22

யாழ் நவற்கிரியைப் பிறப்பிடமாகவும் தற்போது  கனடாவில் வசிக்கும்   திரு ஐயாத்துரை ராகுலன் அவர்களின் பிறந்த நாள் 14-01-2022.இன்று இவரை அன்பு மனைவி அன்புப் பிள்ளைகள்  அன்புச்சகோதரர்கள் 
பெறாமக்கள் மருமக்கள் பேரப்பிள்ளை மாமா மாமி மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் அண்ணா அக்கா அத்தான் மற்றும்  உற்றார் உறவினர்கள் நண்பர்களும்  வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து
இவரை நவற்கிரிமாணிக்கப்பிள்ளையார் சன்னதிமுருகன் நல்லூர் முருகன் கனடா முருகன்  இறை அருள் பெற்று அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திடகுறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
 இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும்  நோய்நொடி இன்றி பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை இணையங்களும் நவக்கிரி இணையமும் வாழ்த்துகின்றன
 வாழ்கவளமுடன்

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



புதன், ஜனவரி 12, 2022

பிறந்தநாள் வாழ்த்துக்கள் திரு ரத்தினம் சந்திரபாலா

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும்  தற்போது பிரான்சை வசிப்பிடமாகக்கொண்ட திரு ரத்தினம் சந்திரபாலா
அவர்களின் அகவை நாள் 12.01-2022 இன்று  இவரை அன்பு மனைவி அன்புப்பிள்ளைகள் அன்பு அம்மா அண்ணா, , 
மாமாமார்கள் மாமிமார்  மற்றும் பெரியப்பா பெரியம்மா சித்தப்‌பா சித்தி  மருமக்கள்  பெறமகள் மாமா மாமி மார்
மச்சான் மச்சாள் மார் அத்தான் அண்ணி மற்றும் 
நண்பர்கள்  உறவினர்கள் இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் சன்னதிமுருகன் 
 பிரான்ஸ் முருகன் இறை ஆசியுடன் குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
அன்பு நிலைப்பெற ஆசை நிறைவேற இன்பம் நிறைந்திட
உலகமும் உறவுகளும் போற்ற 
ஈடில்லா இந்நாளில் பல் கலைகளும் பெற்று மகிழ்ச்சிகள் நிறைந்து..
உன் கனவுகளை அடைந்து
ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியு டனும் சகல நலன்களும் பெற்றுப் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இனைந்து நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ நவற்கிரி .கொம்  நிலாவரை.கொம் நவக்கிரி .கொம்  இணையங்களும்
 வாழ்த்துகின்றன

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>