siruppiddy

செவ்வாய், ஏப்ரல் 20, 2021

தொண்டைமனாறு ஸ்ரீ செல்வச் சந்நிதி ஆலயத்தேர் எரியூட்டல் 20.04..1986

யாழ் வடமராட்சியில் அமர்ந்து அருள் பலித்துக்கொண்டிருக்கும்  பிரசித்திபெற்ற தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் சித்திரத் தேர்  1986 ஆம் ஆண்டு இராணுவத்தினால் எரிக்கப்பட்ட நாள் 20.04..1986 அன்று  
இலங்கையின் முதலாவது மிகப் பெரியதும் ,உலகில் நான்காவது பெரியதேர்  என வர்ணிக்கப்பட்ட பிரசித்திபெற்ற தொண்டைமானாறு
 செல்வச் சந்நிதி சித்திரத் தேர் 20-04-1986 அன்று ஸ்ரீலங்கா இராணுவத்தால் எரியூட்டி சாம்பலாக்கப்பட்டு இன்றுடன் 35 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




செவ்வாய், ஏப்ரல் 13, 2021

மலரும் மங்களகரமான பிலவ வருடப் பிறப்பு சுப நேரங்கள் .14.04.2021

 மலரும் மங்களகரமான பிலவ வருடம் (14.04.2021) புதன்கிழமை அதிகாலை 1.39 மணிக்கு பூர்வ பக்க துதியை திதியில் பரணி நட்சத்திரத்தின் இரண்டாம் பாகத்தில் மகர லக்கினத்தில் பிறக்கிறது.
விஷூ புண்ணிய காலம்
முன்னிரவு நாடி 38 விநாடி 51 (9.39 மணி) முதல் அன்று பின்னிரவு நாடி 58 விநாடி 51 (5.39 மணி) வரை விஷூ புண்ணிய காலமாகும்.
மருத்து நீர், ஆடை
இந்நேரத்தில் மருத்து நீர் வைத்து நீராடி நீலம், சிவப்பு நிறமுள்ள பட்டாடை ஆயினும் நீலம், சிவப்பு கரை அமைந்த புதிய பட்டாடை ஆயினும் அணிய வேண்டும்.
உண்டிகள்
அறுசுவை உணவுடன் பொரிக்கறி, கசப்பு என்பவை சேர்த்தருந்த வேண்டும்.
தோஷ நட்சத்திரங்கள்
அச்சுவினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம், பூரம், உத்தரம் 2ம், 3ம், 4ம் பாதம், அத்தம், சித்திரை 1ம், 2ம் பாதம், பூராடம் இவற்றில் பிறந்தோர் தவறாது மருத்துநீர் தேய்த்து ஸ்நானஞ் செய்து இயன்ற தானதருமங்களைச் செய்து சங்கிரம தோஷத்தை நிவர்த்தி செய்யக்கடவர்.
கைவிசேஷம்
14.04.2021 காலை 09.09 - 09.52 வரை
14.04.2021 பிற்பகல் 2.22 - 4.11 வரை
16.04.2021 அதிகாலை 4.14 - 5.07 வரை
17.04.2021 காலை 07.40 - 09.00 வரை
17.04.2021 பிற்பகல் 03.04 - 03.59 வரை
ஆதாய விரய பலன்
மேடம் - நஷ்டம்
இடபம் - நஷ்டம்
மிதுனம் - சமசுகம்
கர்க்கடகம் - நஷ்டம்
சிங்கம் - பெருநஷ்டம்
கன்னி - சமசுகம்
துலாம் - நஷ்டம்
விருச்சிகம் - நஷ்டம்
தனு - அதிகலாபம்
மகரம் - சமசுகம்
கும்பம் - சமசுகம்
மீனம் - அதிகலாபம்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> 

 

வியாழன், ஏப்ரல் 01, 2021

பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு திரு.துரைராஜா தியாகராஜா 01.04.21

யாழ் நவற்கிரி அச்வேலியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு .துரைராஜா .தியாகராஜா ( தேவன் ) அவர்களின் பிறந்தநாள் 01.04.2021.இன்று தனது இல்லத்தில் குடும்ப
உறவுகளுடன்,
கொண்டாடினார் இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,சகோதரர்கள் மருமகள் மாமி பெரியப்பா ,பெரியம்மார் சித்தப்பா சித்தி மார் பேரப்பிள்ளைகள், மருமக்கள் மச்சான் மச்சாள் மார்சகலன் சகலி மார் மற்றும் குடும்பஉறவுகள் நண்பர்களும் உற்றார் உறவினர்கள்,
, இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்,இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும்,சீரும் சிறப்புடனும் நலமுடனும் இன்னும் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து .இவ்வுறவை
இன்று புதிதாய் பிறந்த உனக்கு என் வாழ்த்துக்கள்
என்றுமே நீ இந்த வெள்ளை மனதுடன்
வாழ என் வாழ்த்துக்கள் .
நீ பிறந்தது சாதனைகள் புரிவதற்கு அல்ல
மனிதனாய் வாழ்வதற்கு
மனிதனை மனிதனாய் புரிந்துகொள்ள
வானமே எல்லையாய்
பூமியே நம் இல்லமாய்
இயற்கையே நம் சொந்தமாய்
வாழ நீ வாழ்த்துக்கள்
உங்களை நாம் பகிர்ந்து கொள்வோம்
என்றும் அன்புடன் வாழ கற்று கொள்வோம்
உறுதிமொழி ஏற்றுவாழ
நவக்கிரி http://lovithan.blogspot.ch இணையமும்
நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் சகோதர இணையங்களும் இணைய உறவுகளும் ஒன்றிய உறவுகளும்
வாழ்த்துகின்றன வாழ்க வளமுடன்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>