siruppiddy

வெள்ளி, அக்டோபர் 01, 2021

பிறந்தநாள் வாழ்த்து செல்வி சாந்தகுமார் சபிரா.01.10.21

யாழ் நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிசை வதிவிடமாகவும் கொண்ட. திரு .,திருமதி. சாந்தகுமார்.&கயிபா  தம்பதியினரின் செல்வப்புதல்வி. சபிரா அவர்களின் ஒன்பதாவது  பிறந்தநாள்.01.10. 2021. இன்று 
 இவரை அன்பு அப்‌பாஅம்மாஅன்பு தம்பி  அப்‌பம்மா பூட்டி அம்மா ஐய்யா அம்மம்மா மாமா மாமி மச்சாள் மார் தாத்தாமார் 
அம்மாமார் பெரியப்பாமார் பெரியம்மாமார் சித்தப்பாமார் சித்தி மார் மாமாமார் மாமி மார் அண்ணாமார் தம்பிமார் அக்காமார்
,மற்றும் நபர்கள்  இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் இறை அருள்பெற்று பல் கலைகளும் கற்று  சீரும்சிறப்புடன்  வாழ  வாழ்த்துகின்றனர் இவர்களுடன்  இனைந்து நவற்கிரி .கொம்
 நிலாவரை நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நவற்கிரி .கொம் இணையங்களும் வாழ்த்துகின்றன.
பிறந்த நாள் வாழ்த்துகவிதை 
அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட
, குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக நீ வாழ்ந்திட வேண்டும்..
புதிதாய் பிறந்த 
நீயே ஒரு 
கவிதை தானே!! 
எங்கள் சபிரக்குட்டிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> 




ஞாயிறு, செப்டம்பர் 12, 2021

பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு செல்வி லோவிதன் யஸ்வினி.12.09.21

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகக் கொண்ட திரு :திருமதி லோவிதன் ரசிபா தம்பதிகளின் செல்வப்புதல்வி யஸ்வினி அவர்களின்
12.09.2021. இன்று தனது இல்லத்தில்  கொண்டாடினார்  இவரை அன்பு அப்பா அம்மா அன்புத்தங்கச்சி
அன்பு ஐய்யா அப்பம்மாமார் பூட்டி தாத்தாமார் அம்மம்மாமார்
மாமாமார் மாமி மார்
மச்சான் மச்சாள்மார் பெரியப்பாமார் ,பெரியம்மாமார் சித்தப்பாமார் சித்தி மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்.இவரை நவற்கிரி ஸ்ரீமாணிக்க பிள்ளையார் இறை அருள் ஆசியுடன்
 இனிக்கும் இந்த பிறந்த நாளில் இருந்து நீ நினைத்த காரியம் அனைத்தும் கைகூடி வாழ்க்கையில் ஆனந்தம் என்ற பெரு வெள்ளத்தில் மூழ்கி திளைத்து வாழ்க்கையில் மென்மேலும் சிறந்து விளங்க வாழ்த்துகின்றோம்
பிறப்பின் தருணம் மிகவும் உணர்ச்சிபூர்வமானது 
அது ஒவ்வொரு வருடமும் வந்து செல்லும் போது அது மிகவும் அழகாகிறது
 வாழ்க்கையில் இறைவன் கொடுத்த மிகப்பெரிய வெகுமதி மனிதனாய் பிறப்பதே எனவே நீ ஜனனித்த இந்த அழகிய பொன்னான நாளை மிக மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டி உன்னை வாயார 
வாழ்த்துகின்றோம் 
தனியாய் நிலவொன்று விண்ணுலகை விட்டு மண்ணுலகம் வந்து என்னுலகில் என் கண் முன்னே தேவதையாய் வலம் வருகிறதோ இன்று பிறந்த என் வெண்ணிலா வாழிய பல்லாண்டு பல்லாண்டு
இந்த நாளில் பூமியில் பூத்த புதிய பூவுக்கு என் வாழ்த்து மடலான எங்கள்  உள்ளம் கனிந்த இனிய பிறந்த தின நல்வாழ்த்துக்கள்
 உரித்தாகுக 

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





வியாழன், செப்டம்பர் 09, 2021

நாம் வீடுகளில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவது எப்படி?

ஆவணி மாதத்தில் வளர்பிறையில் நான்காம் நாளன்று வரும் சதுர்த்தியை ‘விநாயகர் சதுர்த்தி’ என்று கொண்டாடுகிறோம். இது விநாயகர் அவதரித்த தினமாக பார்க்கப்படுகிறது.வீடுகளில் நாம் அவரவர் சக்திக்கு தக்கவாறு வழிபாடுகளை செய்யலாம். கோலம் போட்ட மனையில் அச்சுமண் பிள்ளையாரை வாங்கி வந்து
அதனை மண்டபத்தில் சின்ன வாழைக்கன்று கட்டி, மாவிளை தோரணங்கள் கட்டி, மலர்களால் அலங்காரம் செய்வார்கள்.பின்னர் மண் பிள்ளையாருக்கு சந்தனம், குங்குமம் இட்டு, எருகம்பூ மாலை, அருகம்புல் மாலை ஆகியவை அணிவித்து அலங்காரம் செய்வார்கள். விநாயகருக்கு மிகவும் பிரியமான பத்ரம், வன்னிபத்ரம், அருகம்புல் இவைகள் கொண்டு அர்ச்சனை செய்தால் அதற்கான பலன் ஏராளம் என சொல்லப்படுகிறது.
மேலும் 21 வகையான இலைகளால் அர்ச்சித்தல் சிறப்பு. அந்த இலைகளின் பெயர், அர்ச்சனை செய்தால் கிடைக்கும் பலன்கள் விவரம் வருமாறு:-
(1)முல்லை-அறம்,(2)கரிசலாங்கண்ணி-இல்வாழ்க்கைக்குத் தேவையான பொருள், (3) வில்வம்- இன்பம்; விரும்பியவை 
அனைத்தும்,( 4) அறுகம்புல் – அனைத்துப் பாக்கியங்களும்,( 5) இலந்தை – கல்வி, (6) ஊமத்தை – பெருந்தன்மை, (7) வன்னி – இவ்வுலகில் வாழும் காலத்திலும் சொர்க்கத்திலும் பல நன்மைகள்,( 8) நாயுருவி – முகப்பொலிவு, அழகு,( 9) கண்டங்கத்திரி – வீரம், (10) அரளி-வெற்றி. (11) எருக்கம் இலை- கருவில் உள்ள
சிசுவுக்கு பாதுகாப்பு, (12) மருதம் – குழந்தை பேறு, (13) விஷ்ணுக்ராந்தி – நுண்ணறிவு, (14) மாதுளை-பெரும்புகழ், (15) தேவதாரு – எதையும் தாங்கும் இதயம், (16) மருவு – இல்லற சுகம்,( 17) அரசு – உயர் பதவி, மதிப்பு, (18) ஜாதி மல்லிகை – சொந்த வீடு, பூமி பாக்கியம்,(19) தாழம் இலை – செல்வச்செழிப்பு,( 20) அகத்திக் கீரை – கடன் தொல்லையில் இருந்து விடுதலை, (21) தவனம் – நல்ல கணவன்-மனைவி அமைதல்.
இந்த 21 இலைகளைத் தவிர நெல்லி, மரிக்கொழுந்து, கரிசலாங்கண்ணி, மாவிலை, துளசி, பாசிப்பச்சை ஆகிய இலைகளாலும் விநாயகருக்கு அர்ச்சனை செய்யலாம். அர்ச்சனை செய்தபின் பலவிதமான கனிகள், முக்கியமாக நாவல் பழம், மாதுளம் பழம், கொய்யாப்பழம், விளாம்பழம் ஆகியவை நைவேத்யம் செய்ய வேண்டும்.
விநாயகப்பெருமானுக்கு பூஜைகள் செய்யும் போது அருகம்புல்லும், வன்னி இலைகளும், மந்தாரைப் பூவும் அவசியம் இருக்க வேண்டும். பொதுவாக சிவபெருமானின் பூஜைக்கு உகந்த எல்லா மலர்களும் விநாயகர் வழிபாட்டுக்கு ஏற்றவைதான். ஆனால் தாழம்பூ, துளசி ஆகியவை மட்டுமே கண்டிப்பாகக்கூடாது. பெரும்பாலன ஆலயங்களில் விநாயகருக்கு துளசி மாலை அணிவிக்கிறார்கள். என்றாலும் 
இது தவறாகும்.
விநாயகருக்கு நைவேத்தியம் செய்யப்பின் வருவனவற்றைப் படைக்கலாம். அப்பம், அவல், அமுது, அவரை, இளநீர், எள்ளுருண்டை, கரும்பு, கல்கண்டு, வள்ளிக்கிழக்கு, வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், மிளகு சாதம், தேன், தினைமாவு, நெய், பச்சரிசி, பால்,பாகு வெல்லம், பணியாரம், 
கொழுக்கட்டை, பிட்டு, லட்டு
வடை, வெண்ணெய், விளாம்பழம், நாவல்பழம், வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம், ஆகியவை. விநாயகருக்கு அபிஷேகம் செய்ய
 சந்தனாதித் தைலம், மாப்பொடி, மஞ்சள்பொடி, திரவியப்பொடி, ரசபஞ்சாமிர்தம், பழப்பஞ்சாமிர்தம், நெய், தேன், பால், தயிர், கருப்பஞசாறு,
 இளநீர், சந்தனம், பழ ரசங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.மேலும் பிள்ளையாருக்கு பாயாசம், வடை, அப்பம் ஆகியவைகளும் முக்கியமாக கொழுக்கட்டை விநாயகருக்கு பிடித்தமானது



வியாழன், ஆகஸ்ட் 12, 2021

ஆடிக் வெள்ளியில் இந்த 1 பொருளை வாங்கினால் வறுமை நீங்கும்,

ஆடி மாதம் என்றாலே மங்கல பொருட்களுக்கு பஞ்சமே இல்லாமல் வாங்கி குவிக்கக் கூடிய ஒரு இனிய மாதமாக இருக்கிறது. ஆடி மாதத்தில் வாங்கும் எந்த ஒரு மங்களப் பொருட்களும் பன்மடங்கு பெருகி நமக்கு சுபீட்சத்தை அள்ளிக் கொடுக்கும். அது மட்டுமல்லாமல் மகாலட்சுமி வாசம் செய்யும் மங்கல பொருட்களாக இருக்கும் மஞ்சள், குங்குமம் போன்ற பூஜைக்கு உரிய பொருட்களை ஆடி மாதத்தில் வாங்கினால் மாங்கல்ய 
பலம் நீடிக்கும்.
ஆடி மாதம் வாங்க கூடிய எந்த ஒரு பொருளும் அள்ள அள்ள குறையாத செல்வத்தை கொண்டு வந்து சேர்க்கும். கடைசியாக வரும் ஆடி வெள்ளியில் இந்த பொருளை வாங்கி வையுங்கள். ஏற்கனவே இந்த பொருளை வாங்கிவிட்டு இருந்தால் கூட பரவாயில்லை, கொஞ்சமாவது அன்றைய நாளில் இந்த ஒரு பொருளை வாங்கி பயன்படுத்துவதால் ஏழேழு பிறவிக்கும் வறுமை நீங்கி, செல்வம் ஆனது உயரும். அப்படி என்ன பொருள் அது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து பதிவை நோக்கி 
பயணிப்போம்
ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளியிலும் ஏதாவது ஒரு மங்கல பொருட்களை வாங்கி வருவது நல்லது. அவை புதிதாக நம்மிடம் சேரும் பொழுது தெய்வ கடாட்சம் ஆனது நீடித்து நிலைத்து 
நிற்கும். குறிப்பாக வாசனை மிகுந்த மங்கல திரவியங்கள், பொடிகள் போன்றவற்றை வாங்குவது மிகவும் சிறப்பான பலன்களைக் 
கொடுக்கும். ஜவ்வாது, 
அத்தர், பன்னீர், புனுகு, ஏலக்காய், பச்சை கற்பூரம் போன்ற பொருட்களை வாங்குவது இன்னும் சிறப்பு. நீங்கள் ஒவ்வொரு முறை சாமி கும்பிடும் பொழுது உங்கள் பூஜை அறையில் கட்டாயம் பஞ்ச பாத்திரத்தில் தண்ணீரை வைக்க வேண்டும். ஒவ்வொரு முறை பூஜை செய்யும்
 பொழுதும் அந்த தண்ணீரை புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். பஞ்ச பாத்திரத்தில் இருக்கும் தண்ணீர் மறுநாள் பார்த்தால் கொஞ்சம் குறைந்து இருக்கும். எனவே அந்த தண்ணீரை மீண்டும் பயன்படுத்தக் கூடாது. புதிதாக தண்ணீரை நிரப்பி தான் 
பயன்படுத்த வேண்டும்.
ஞ்ச பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி வைத்தால் மட்டும் போதாது, அதை தீர்த்தமாக மாற்ற துளசி இலைகள், பச்சை கற்பூரம், கிராம்பு போன்றவற்றை சேர்ப்பது உண்டு. இது எதுவுமே உங்களிடம்
 இல்லை என்றால் கூட பரவாயில்லை. ஏலக்காயை மட்டும் நுணுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். பூஜை அறை முழுவதும் தெய்வீக மணம் கமழும். வீட்டில் 
இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் விலகி ஓடிவிடும். பிரச்சனைகள் தானாகவே குறைய ஆரம்பித்துவிடும். அது போல 
ஆடி வெள்ளியில் கடைசி நாளில் வாசனைப் பொருட்களை வாங்குவதும், கூடவே ‘அரிசி’ வாங்கி வைப்பது மிகவும் நல்லது. அன்னபூரணியாக இருக்கும் அரிசியை
 ஆடி கடைசி வெள்ளி அன்று வாங்கினால் அற்புத பலன்களை காண முடியும். குடும்பத்தில் இருக்கும் வருமானப் பற்றாக்குறை நீங்கி, வறுமை அகன்று, செல்வம் ஆனது பன்மடங்கு உயரும். தன, தானியம் பெருகும் என்பது நம்பிக்கை எனவே ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அன்று உங்களிடம் அரிசி இருந்தாலும், ஒரு கிலோ அரிசியை வாங்கி அன்றைய நாளில் அந்த புது அரிசியை கொண்டு சமைத்து, அம்பாளுக்கு சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் படையுங்கள்! இப்படி செய்வதால் சிறப்பானதொரு பலனை காணலாம்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





ஞாயிறு, மே 16, 2021

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு தீர்த்தம் எடுக்கசெல்பவர்களுக்கு

வரலாற்று சிறப்பு மிக்க முல்லைத்திவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உட்சவத்தின் தீர்த்தம் எடுத்தல் உட்சவம்.17-05-2021. நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ள நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று நிலைமையினை கருத்தில்கொண்டு அனுமதிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
அனுமதிக்கப்பட்ட நபர்கள் 24 பேருக்கும் பி.சி.ஆர் பரிசேதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவ்வாறு கலந்துகொள்ளவுள்ள வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய நிர்வாகம், கிரியைதாரர்கள், முள்ளியவளை காட்டுவிநாயகர் ஆலய நிர்வாகத்தினர் சிலாவத்தை கோவில்காரர்கள்,நோன்பு மடத்தில் நிற்பவர்கள், தீர்த்தக்கரையில் உள்ள ஞானவைரவர் ஆலய நிர்வாகத்தினர் என தீர்த்தம் எடுக்கும் நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ள 18 பேருக்கும் 15.05.2021 அன்று முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் ஆறு பேருக்கும் 16.05.2021 அன்று பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
உழவு இயந்திரத்தில் மட்டுப்படுத்திய நபர்கள் மட்டும் தீர்த்தம் எடுக்க செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கல் நிகழ்வுக்கான தீர்த்தம் எடுத்தல் நிகழ்வு நாளை 17.05.21 அன்று நடைபெற்று முள்ளியவளை காட்டுவிநாயகர் ஆலயத்தில் ஏழு நாட்கள் உப்பு நீரில் விளக்கெரியும் அற்புத காட்சி இடம்பெறும் அத்தோடு தொடர்ந்து எழு நாட்கள் முள்ளியவளை காட்டுவிநாயகர் ஆலயத்தில் பூசை வழிபாடுகள் நடைபெற்று 23.05.21 அன்று ஞாயிற்றுக்கிழமை காட்டுவிநாயகர் ஆலயத்தின் பொங்கல் நிகழ்வினை தொடர்ந்து தீர்த்தம் வற்றாப்பளை அம்மன் ஆலயம் எடுத்து செல்லப்பட்டு 24.05.21 அன்று வற்றாப்பளை கண்ணகி அம்மனின் வைகாசி விசாக பொங்கள்
 நடைபெறுவது வழக்கம்.
பொது சுகாதார விதிமுறைகளை கடைப்பிடித்து நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றினை கருத்தில் கொண்டு அமைதியான முறையில் பொங்கல் நிகழ்வு நடைபெற அரசாங்க அதிபர்,
காவல்துறையினர், ஆலய நிர்வாகத்தினர் ,சுகாதார பிரிவினர் உள்ளிட்டவர்கள் மேற்கொண்ட கூட்டங்களில் தீர்மானமாக 
எடுக்கப்பட்டுள்ளது.
சுகாதார பிரிவினரும் படையினரும் மட்டுப்படுத்தப்பட்ட நபர்களே நிகழ்வுகளில் கலந்துகொள்ளலாம் என 
அனுமதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தீர்த்தம் எடுக்கும் நிகழ்வில் அனுமதிக்கப்பட்டவர்களை தவிர பக்த்தர்கள் எவரும் நாட்டு நிலமையினை கருத்தில்கொண்டு கலந்து கொள்வதை தவிர்க்குமாறும் 
அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>





செவ்வாய், ஏப்ரல் 20, 2021

தொண்டைமனாறு ஸ்ரீ செல்வச் சந்நிதி ஆலயத்தேர் எரியூட்டல் 20.04..1986

யாழ் வடமராட்சியில் அமர்ந்து அருள் பலித்துக்கொண்டிருக்கும்  பிரசித்திபெற்ற தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் சித்திரத் தேர்  1986 ஆம் ஆண்டு இராணுவத்தினால் எரிக்கப்பட்ட நாள் 20.04..1986 அன்று  
இலங்கையின் முதலாவது மிகப் பெரியதும் ,உலகில் நான்காவது பெரியதேர்  என வர்ணிக்கப்பட்ட பிரசித்திபெற்ற தொண்டைமானாறு
 செல்வச் சந்நிதி சித்திரத் தேர் 20-04-1986 அன்று ஸ்ரீலங்கா இராணுவத்தால் எரியூட்டி சாம்பலாக்கப்பட்டு இன்றுடன் 35 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




செவ்வாய், ஏப்ரல் 13, 2021

மலரும் மங்களகரமான பிலவ வருடப் பிறப்பு சுப நேரங்கள் .14.04.2021

 மலரும் மங்களகரமான பிலவ வருடம் (14.04.2021) புதன்கிழமை அதிகாலை 1.39 மணிக்கு பூர்வ பக்க துதியை திதியில் பரணி நட்சத்திரத்தின் இரண்டாம் பாகத்தில் மகர லக்கினத்தில் பிறக்கிறது.
விஷூ புண்ணிய காலம்
முன்னிரவு நாடி 38 விநாடி 51 (9.39 மணி) முதல் அன்று பின்னிரவு நாடி 58 விநாடி 51 (5.39 மணி) வரை விஷூ புண்ணிய காலமாகும்.
மருத்து நீர், ஆடை
இந்நேரத்தில் மருத்து நீர் வைத்து நீராடி நீலம், சிவப்பு நிறமுள்ள பட்டாடை ஆயினும் நீலம், சிவப்பு கரை அமைந்த புதிய பட்டாடை ஆயினும் அணிய வேண்டும்.
உண்டிகள்
அறுசுவை உணவுடன் பொரிக்கறி, கசப்பு என்பவை சேர்த்தருந்த வேண்டும்.
தோஷ நட்சத்திரங்கள்
அச்சுவினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம், பூரம், உத்தரம் 2ம், 3ம், 4ம் பாதம், அத்தம், சித்திரை 1ம், 2ம் பாதம், பூராடம் இவற்றில் பிறந்தோர் தவறாது மருத்துநீர் தேய்த்து ஸ்நானஞ் செய்து இயன்ற தானதருமங்களைச் செய்து சங்கிரம தோஷத்தை நிவர்த்தி செய்யக்கடவர்.
கைவிசேஷம்
14.04.2021 காலை 09.09 - 09.52 வரை
14.04.2021 பிற்பகல் 2.22 - 4.11 வரை
16.04.2021 அதிகாலை 4.14 - 5.07 வரை
17.04.2021 காலை 07.40 - 09.00 வரை
17.04.2021 பிற்பகல் 03.04 - 03.59 வரை
ஆதாய விரய பலன்
மேடம் - நஷ்டம்
இடபம் - நஷ்டம்
மிதுனம் - சமசுகம்
கர்க்கடகம் - நஷ்டம்
சிங்கம் - பெருநஷ்டம்
கன்னி - சமசுகம்
துலாம் - நஷ்டம்
விருச்சிகம் - நஷ்டம்
தனு - அதிகலாபம்
மகரம் - சமசுகம்
கும்பம் - சமசுகம்
மீனம் - அதிகலாபம்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> 

 

வியாழன், ஏப்ரல் 01, 2021

பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு திரு.துரைராஜா தியாகராஜா 01.04.21

யாழ் நவற்கிரி அச்வேலியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு .துரைராஜா .தியாகராஜா ( தேவன் ) அவர்களின் பிறந்தநாள் 01.04.2021.இன்று தனது இல்லத்தில் குடும்ப
உறவுகளுடன்,
கொண்டாடினார் இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,சகோதரர்கள் மருமகள் மாமி பெரியப்பா ,பெரியம்மார் சித்தப்பா சித்தி மார் பேரப்பிள்ளைகள், மருமக்கள் மச்சான் மச்சாள் மார்சகலன் சகலி மார் மற்றும் குடும்பஉறவுகள் நண்பர்களும் உற்றார் உறவினர்கள்,
, இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்,இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும்,சீரும் சிறப்புடனும் நலமுடனும் இன்னும் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து .இவ்வுறவை
இன்று புதிதாய் பிறந்த உனக்கு என் வாழ்த்துக்கள்
என்றுமே நீ இந்த வெள்ளை மனதுடன்
வாழ என் வாழ்த்துக்கள் .
நீ பிறந்தது சாதனைகள் புரிவதற்கு அல்ல
மனிதனாய் வாழ்வதற்கு
மனிதனை மனிதனாய் புரிந்துகொள்ள
வானமே எல்லையாய்
பூமியே நம் இல்லமாய்
இயற்கையே நம் சொந்தமாய்
வாழ நீ வாழ்த்துக்கள்
உங்களை நாம் பகிர்ந்து கொள்வோம்
என்றும் அன்புடன் வாழ கற்று கொள்வோம்
உறுதிமொழி ஏற்றுவாழ
நவக்கிரி http://lovithan.blogspot.ch இணையமும்
நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் சகோதர இணையங்களும் இணைய உறவுகளும் ஒன்றிய உறவுகளும்
வாழ்த்துகின்றன வாழ்க வளமுடன்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>









வெள்ளி, மார்ச் 19, 2021

நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய ரதோற்சவம்.19.03.2021

இலங்கை திரு நாட்டில் இயற்கை வளம் நிறைந்த யாழ் நவற்கிரி கிராமத்தில்  வீற்றிருந்து வேண்டு வோர்க்கு வேண்டும் வரம் அருளும் பிரசித்தி பெற்ற எம் பெருமான் அருள் மிகு நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார்
ஆலய வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா விஞ்ஞாபன ரதோற்சவம் ( தேர்த்திருவிழா)14ம் நாள் பகல். 19-03-2021. 
வெள்ளிக்கிழமை இன்று.
அடியவர்கள் கூ ட்டத்துடன் மிகவும் சிறப்பாக ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் 
திரு த் தேரில் அமர்ந்து,
வீ திஉலாவந்தார் எம் பெருமானின் தேர் திருவிழாமிகச்சிறப்பாக நடை பொற்றது பல கிராமங்களிலும் இருந்து பக்தர்கள் கலந்துகொண்டனர் பக்தர்கள் கூட்டதில் திரு வீதி தேரில் உலா வந்தார்,

ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் தேர்த் திருவிழா நிகழ்வின்
நிழல் படங்கள் இணைப்பு

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>















ஞாயிறு, பிப்ரவரி 28, 2021

பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு திருமதி, தியாகராஜா.தர்மா 28.02.21

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு,திருமதி, தியாகராஜா.( தர்மா ) அவர்களின் பிறந்த நாள் 28.02.2021..இன்று தனது இல்லத்தில்
குடும்ப உறவுகளுடன் கொண்டாடினார்  இவரை அன்புக்கணவர் அன்புப்பிள்ளைகள் அன்புஅம்மா ,
மருமக்கள் பேரப்பிள்ளைகள் சித்தப்பா சித்தி பெரியப்பா பெரியம்மா மச்சான்மார் மச்சாள் மார் சகோதரர்கள் இவரை 
வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவக்கிரி .கொம் நிலாவரை .கொம் நவற்கிரி
உறவு இணையங்களும், நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையமும்
நவற்கிரி அப்பா வயிரவர் இவரை 
நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் இறை அருள்பெற்று இவ்வருடத்தின் எல்லா நாட்களும் ஒன்று கூடி இந்நாளில் உன்னை வாழ்த்தும் இனிய 
பொன்னாலே உன் பிறந்த நாள். அனைத்து தினங்களும் உன் வாழ்க்கையில் பொன்னாய் மிளிர உன்னை வாழ்த்துகிறேன். 
கடவுள் கருணையினால் இன்று 
போல் என்றும் உன் வாழ்வில் மகிழ்ச்சி பொங்க, செல்வம் செழிக்க, நேசமான நண்பர்களுடனும் பிரியமான உறவுகளுடனும் என்றும் குதூகலுடத்துடன் உன் புன்முறுவலோடு நீடூடி வாழ இறைவனிடம் உனக்காக பிரார்த்திக்கிறேன்நோய் நொடி இன்றி என்றும் இன்பமாய் எல்லாநமும் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து அன்பு நிலைப்பெறஆசை நிறைவேற 
இன்பம் நிறைந்திட
ஈடில்லா இந்நாளில் உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றன, வாழ்கவளமுடன்








 

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>

வியாழன், பிப்ரவரி 04, 2021

உங்களது நல்ல இல்லத்திற்கு சில ஆன்மீக குறிப்புகள்

வீட்டில் அமைதி, செல்வம், இன்பம் மற்றும் அனைத்து வகையான  நல்ல விஷயங்கள் நிலைக்க நாம் இந்த ஆன்மீக குறிப்புகளை பின்பற்றுவது சாலச்சிறந்தது… 
1, ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல்படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து கொடுக்க/வாங்க வேண்டும்.
2. செல்வம் நிலைக்க, விருத்தி அடைய, பணம் கொடுக்கல் வாங்கல், செவ்வாய் கிழமை, செவ்வாய் ஹோரையில் நடப்பது உத்தமம். கொடுப்பவருக்கு பணம் திரும்பக் கிடைக்கும். வாங்குபவரால் பணத்தை திரும்பக் கொடுக்க இயலும். திரும்ப கொடுப்பதும் செவ்வாய் ஹோரையில் 
நடப்பது சிரேஷ்டம்.
3. வாசற்படி, உரல், ஆட்டுக்கல்,அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.
4. இரவு நேரங்களில் பால், மோர், தண்ணீர் அடுத்தவர்கள் எடுத்து செல்ல அனுமதிக்கக் கூடாது.வெற்றிலை, வாழையிலை இவைகளை வாடவிடக்கூடாது. வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது.சுண்ணாம்பு வெற்றிலையை போடக்கூடாது.
5. எரியும் குத்துவிளக்கை தானாக அணையவிடக்கூடாது, ஊதியும் அணைக்ககூடாது. புஷ்பத்தினால் அணைக்கவேண்டும்.
6. வீட்டில் யாரையும் சனியனே என்று திட்டக்கூடாது. எழவு என்றும் கூறக்கூடாது.7. அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்தக்கூடாது.துணிமணிகளை உடுத்திக்கொண்டே தைக்கக் கூடாது.உப்பை தரையில் சிந்தக்கூடாது. அரிசியை கழுவும் போது, 
தரையில் சிந்தக்கூடாது.
8. உங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் பெருகும்.
9. ராம நாமம் உச்சரிக்கப்படும் இடத்திற்கு அனுமன் தேடி வந்துவிடுவான். அங்கு அவனை கூப்பிடவேண்டிய அவசியம் கூட இல்லை. 
அதே போல, ஸ்ரீமன் நாராயணனின் பெருமை பேசப்படும் இடத்தில், அவன் பாடல்கள் ஒலிக்கும் இடத்தில் அன்னை திருமகள் தானாகவே
 வந்துவிடுகிறாள். ஆகவே, இல்லந்தோறும், காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலிப்பது அவசியம். அந்த வீடுகளில் செல்வச் செழிப்பு தாமாகவே 
வந்துவிடும்.
10. வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும். விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் நெல்லி 
மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு. லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது நெல்லி. நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக 
அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீய சக்திகளும் அணுகமுடியாது. நெல்லிமரத்தடியில் கிடைக்கும் தண்ணீர் உவர் தன்மையில்லாமல் மிகவும் சுவையாக இருக்கும்.
11, சுமங்கலிகள், பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் இவை அனைத்தும் லக்ஷ்மிக்கு 
மிகவும் பிடித்தவை.
12. தினசரி துளசி மாடத்திற்கு விளக்கேற்றி மும்முறை வலம் வர வேண்டும்.
13. பசுக்களுக்கு ஒரு பழம் வாங்கிக் கொடுத்தாலே கோடி புண்ணியம் தேடி வரும் எனும்போது அவற்றுக்கு தீவனங்கள் வாங்கி தந்து போஷித்தால்? பசுக்களிடம் குபேரன் குடிகொண்டிருக்கிறான் கோமாதா பூஜை குபேர
 பூஜைக்கு சமம்.
14.செல்வம் நிலைத்து நிற்க, நமது வீடுகளில் வெள்ளை புறாக்கள் வளர்க்கலாம்.
15. சங்கு, நெல்லிக்காய், பசு சாணம், கோஜலம், தாமரைப்பூக்கள், சுத்தமான ஆடைகள் வீட்டில் இருப்பது சுபம்.
16. காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப் படம் இவற்றை பார்க்கவேண்டும்.
17. தினசரி விளக்கேற்றுவது சிறப்பு. செவ்வாய் மற்றும் வெள்ளிகளில் 5 முகம் கொண்ட விளக்கேற்றுவது இன்னும் சிறப்பு.
18, விளக்கை அமர்த்துதல் அல்லது மலையேற்றுதல் என்று தான் சொல்லவேண்டும். ‘அணைப்பது’ என்ற வார்த்தையை உபயோகிக்கவே கூடாது. அது அமங்கலச் சொல்லாகும்.
19. விளக்கை தானாக மலையேற விடக்கூடாது, ஊதியும் அமர்த்தக்கூடாது. புஷ்பத்தினாலும் மலையேற்றக்கூடாது. அப்போ எப்படித் தான் சார் மலையேற்றுவது என்று தானே கேட்க்கிறீர்கள்? அப்படி
 கேளுங்க…. தீபத்தை எப்போதும் கல்கண்டை கொண்டு தான் அமர்த்தவேண்டும். சரியா?
20. வீட்டில் சண்டை, சச்சரவு இருக்கக்கூடாது. அமங்கலச் சொற்கள் பேசவே கூடாது.மாலை ஆறுமணிக்கே திருவிளக்கு ஏற்றிவிட வேண்டும்.ஊனமுற்றவர்களுக்கோ, ஏழை மாணவர்களுக்கோ முடிந்த தர்மத்தை செய்யுங்கள்.
21. எந்த வீட்டில் சாப்பாட்டிற்கு ருசியாக ஊறுகாய் இருக்கிறதோ அந்த வீட்டில் தரித்திரம் இருக்காது. எனவே உங்கள் வீட்டில் எப்போதும் பலவித ஊறுகாய்கள் குறைவின்றி இருக்கட்டும்.
22, எந்த வீட்டில் பெண்கள் கௌரவமாக நடத்தப்படுகிறார்களோ, எந்த வீட்டில் பெண்கள் சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்களோ அங்கு 
திருமகள் குடியேறுவாள்.
23, வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், 
சந்தோஷமும் பெருகும்.
24, எந்தப் பொருளையும் இல்லை, இல்லை எனக் கூறக் கூடாது. இந்தப் பொருள் வாங்க வேண்டியதிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
25.எந்தக் குறையையும் எண்ணி கண்ணீர் விடக்கூடாது.சர்ச்சை செய்யாத சண்டையிடாத பெண்கள் வாழும் இல்லங்களில் மகாலக்ஷ்மி 
வாசம் செய்கிறாள்.
26,தயிர், அருகம் புல், பசு முதலியவைகளைத் தொடுவதும், நேர்மையாக இருப்பதும், அடிக்கடி பெரியோர்களைத் தரிசிப்பதும், கோயிலுக்குச் சென்று தெய்வத் தரிசனம் செய்வதும் செல்வத்தைக் கொடுக்கும்.
27,குழந்தைகளிடமும், வயதானவர்களிடமும், 
நோயாளிகளிடமும் கோபத்தைக் காட்டக் கூடாது. கேட்பதற்கு இனிமையான நல்ல சொற்களை உபயோகிப்பவர்களுக்கு எல்லா நன்மைகளும் வந்தடையும். இரக்க குணம் உடையவர்க்கு தெய்வம் உதவி புரியும். அன்பு உள்ளம் கொண்டவர்க்கு உலகம் தலை வணங்கும்.
28,அன்னம், உப்பு, நெய் இவைகளைக் கையால் பரிமாறக் கூடாது. கரண்டியால் மட்டுமே பரிமாறவேண்டும். கையால் பரிமாறப்பட்ட அன்னம், உப்பு, நெய் இவை கோ மாமிசத்துக்கு சமம்.
29,பெண்கள் வளையல் அணியாமல் எதையும் பரிமாறக் கூடாது.அமாவாசை யன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது வெள்ளிக்கிழமை உப்பு வாங்கினால் நன்மை உண்டாகும்.இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை வெளியே கொட்டக் கூடாது

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



புதன், ஜனவரி 27, 2021

திருக்கல்யாணம் - முருகனின் அறுபடை வீடுகளிலும் தைப்பூசத்திருவிழா கோலாகலம்

 தைப்பூச திருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமான் ஆலயங்களிலும் சிவபெருமான் ஆலயங்களிலும் 2021.தைப்பூசத்திருவிழா:சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, 
திருத்தணி, பழமுதிர்ச்சோலை, 
சுவாமிமலை கோவில்களில் மட்டுமல்லாது தமிழகம் முழுவதிலும் உள்ள முருகன் கோவில்களிலும் சிவ ஆலயங்களிலும் திருவிழாக்கள் களைகட்டியுள்ளன. பழனியில் 306 நாட்களுக்குப் பிறகு தங்கத்தேரோட்டம் நடைபெற்றது. இன்று திருக்கல்யாணம் நடைபெறுகிறது. 
ஆறுமுகக்கடவுளான முருகப் பெருமானுக்கு 
தமிழ் மாதப்பிறப்பு, வைகாசி விசாகம், ஆடிக் கிருத்திகை, சூரசம்ஹாரம், தைப்பூசம், மாசி மகம் மற்றும் பங்குனி உத்திரம் என மாதந்தோறும் திருவிழாக்கள் நடைபெறுவது வாடிக்கை.
 அதிலும் அறுபடை வீடுகளில் ஒவ்வொரு படைவீடுகளிலும் ஒவ்வொரு திருவிழா விமரிசையாக நடைபெறும். குறிப்பாக, 
முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாகத் திருவிழா, இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் சூரசம்ஹாரத் திருவிழா, மூன்றாம் படைவீடான பழனியில் தைப்பூச திருவிழா
 மற்றும் பங்குனி உத்திர திருவிழா என ஒவ்வொரு படைவீடும் ஒவ்வொரு விதமான திருவிழாவுக்கு பிரசித்து பெற்று 
விளங்குகிறது
தைப்பூசம் திருவிழா நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு மாநிலம் முழுவதிலும் உள்ள முருகன் ஆலயங்களில் மட்டுமல்லாது சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட ஆலயங்களிலும் திருவிழாக்கள் களைகட்டியுள்ளன. அறுபடைவீடுகளில் இரண்டாம் படைவீடான
 திருச்செந்தூரில், தைப்பூச விழாவைக் காண பாதயாத்திரையாக வரும் பக்தர்கள், கடலில் நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களின் வருகையால் திருச்செந்தூர் நகரமே விழாக்கோலம் 
பூண்டுள்ளது.
தைப்பூசம் கோலாகலம் தமிழர் திருவிழாவான தைப்பூசத் திருவிழா அறுபடைவீடுகளிலும் ஆண்டு தோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டும் அறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும் கடந்த வாரம் கொடி 
ஏற்றத்துடன் தொடங்கியது. தைப்பூச திருவிழாவை நாளை நடைபெறுவதை முன்னிட்டு பழநி, மற்றும் திருச்செந்தூருக்கு முருக பக்தர்கள் மாலையணிந்து விரதமிருந்து பாதயாத்திரையாக சென்று 
கொண்டுள்ளனர்.
தங்க ரத புறப்பாடு மூன்றாம் படைவீடான பழனியில் நாளை தேரோட்டம் நடைபெறுவதைக் காண்பதற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் பழநியை நோக்கி பாதயாத்திரை செல்கின்றனர். கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தங்க ரத புறப்பாடு 306 நாட்களுக்குப் பிறகு நேற்று நடைபெற்றது.
தைப்பூச தேரோட்டம் இன்றைய தினம் வள்ளி தேவசேனா சமேத முத்துக்குமாரசாமி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து வெள்ளித் தேரோட்டம் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் நாளை நடைபெறுகிறது. பழனி முருகனைக் காணவும் தைப்பூச தேரோட்டத்தைக் காண ஏராளமான பக்தர்கள் பாதையாத்திரை வந்து கொண்டிருக்கின்றனர்.
காவடி சுமந்த பக்தர்கள் முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூருக்கு விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த முருக பக்தர்கள் அனைவரும் பாதயாத்திரையாக சென்று கொண்டுள்ளனர். தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற நீளமான அலகுகள் குத்திக்கொண்டும், காவடி எடுத்துக்கொண்டும் பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூரை நோக்கி வந்த 
வண்ணம் உள்ளனர்.
முருகனை காண வரும் பக்தர்கள் திருத்தணி முருகன் கோவிலில்.27-01-2021. இன்று தைப்பூச திருவிழாவையொட்டி, மலைக்கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருவதால் பல மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்துச் சென்றனர். இதேபோல 
திருப்பரங்குன்றம், சுவாமிமலை,பழமுதிர்சோலையிலும் பக்தர்கள் அலைகடலென திரண்டுள்ளனர். தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நாளைய தினம் அரசு பொது விடுமுறை
 அறிவித்துள்ளதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முருகப்பெருமான் ஆலயங்களில் சாமி தரிசனம் செய்வார்கள் என்று 
எதிர்பார்க்கப்படுகிறது.,

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>>>>











<<<