siruppiddy

திங்கள், அக்டோபர் 24, 2022

இருளகன்று ஒளிவெள்ளம் பெருக இணைய வாசகர்களுக்கு என் இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள்

உங்கள் வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை உலக வாழ் இந்துக்களால்24-10-2022.திங்கள்கிழமை 
 இன்று கொண்டாடப்படுகின்றது.
அனைவரினதும் வாழ்விலும் துன்பங்கள் நீங்கி இம்மண்ணுலகில் புது இன்பங்கள் மிளிரட்டும்!
தீபத்திருநாளை கொண்டாடும், உலகம் எங்கும் பரந்து வாழும் எமது வாசகர்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில்
எனது இந்த இணையயங்களும்  பெருமை கொள்கின்ற
 நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன 
 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



ஞாயிறு, அக்டோபர் 23, 2022

வடமராட்சியில் அமைந்துள்ள நாகர் கோயில் ஆலயத்தில் காட்சி கொடுத்த நாகதம்பிரான்.

வடமராட்சி கிழக்கில் அமைந்துள்ள நாகர் கோயில் ஆலயத்தில்  இன்றைய தினம்  காட்சி கொடுத்த நாகதம்பிரான்.புதுமைகள் பலபுரியும் வடமராட்சி  நாகர் கோயில் ஆலயத்தில் நாகதம்பிரான் காட்சி கொடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது
பார்ப்பதற்கு படையெடுக்கும் மக்கள்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


வெள்ளி, ஆகஸ்ட் 05, 2022

எங்கே பணத்தை வைக்கிறீர்கள் இந்த தவறுகளை செய்தால் வீட்டில் செல்வம் தங்காது

பணத்தை வைக்கும் இடத்தில் லக்ஷ்மி குபேர படத்தை, அல்லது எந்திரத்தை வைத்துக்கொண்டால் செல்வம் மேலும் பெருகும்.தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்கள் தங்களது இருக்கை ஆனது வட மேற்கு திசையை நோக்கியவாறு இருந்தால், பணம் வைக்கும் பெட்டி உங்களுக்கு இடது புறத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
அதேபோல் கிழக்கு திசையை நோக்கியவாறு இருக்கை இருந்தால் வலதுபுறத்தில் பணத்தை வைக்கும் இடம் அமைத்துக் 
கொள்வது நல்லது.
பணம் வைப்பதற்கான மிகச்சரியான திசை என்றால் வடக்கு திசை தான். அறையின் 4 மூலைகளில் கட்டாயம் பணத்தை வைக்கக்கூடாது. அதாவது வடகிழக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு போன்ற மூலைகளில் பணத்தை வைப்பது கூடாது. தெற்கு திசையும் முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது பணம் வைத்திருக்கும் இடமானது நுழைவு வாயிலை பார்த்தவாறு கட்டாயம் இருக்கக் கூடாது. வீட்டிற்குள் நுழையும் மற்றவர்களின் கண்களுக்கு நேரடியாக படாதபடி இருக்கவேண்டும்.
அதேபோல் பூஜையறையில் சிலர் பணத்தை வைத்திருப்பார்கள். இதுவும் தவறான முறையாகும். பணம் வைத்திருக்கும் இடத்தை எப்போதும் சுத்தமாக பார்த்து கொள்ள வேண்டும். பூச்சிகள் வரும்படி
 விட்டுவிட கூடாது.
பணம் வைத்திருக்கும் பெட்டியில் எப்போதும் 1 ரூபாய் நாணயம் ஒன்று இருக்க வேண்டும். நீங்கள் உபயோகப்படுத்தும் பேர்ஸிலும் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்திருங்கள்.
பணம் என்பது நிலையான ஒரு பொருள் அல்ல. இன்று இருக்கும் நாளை இல்லாமல் போகும்.
மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்காமல் சம்பாதிக்கும் பணம் வீண் போவதில்லை. ஈட்டிய செல்வத்தை நிலைக்குமாறு வழி 
செய்து கொள்ளுங்கள்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



வெள்ளி, ஜூலை 22, 2022

ஆலயத்தில் கோவில் மணி அடிப்பதற்கு பின் ஒளிந்துள்ள ரகசியம்

கோவிலுக்கு செல்லும் அனைவரும் ஏன்? எதற்கு? என தெரியாமல் பின்பற்றும் விஷயங்களில் ஒன்று கோவில் மணி அடிப்பது.கோவிலில் மணி அடித்துவிட்டு வணங்கினால் கடவுள் காது கொடுத்து கேட்பார் என சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
கோவிலில் அடிக்கும் மணி ஓசைக்கும், மனிதர்களின் மூளைக்கும் இடையே தொடர்பு உள்ளது என சாஸ்திரத்தில் நமது முன்னோர்கள் 
கூறியிருக்கின்றனர்.
இவ்வாறு பல சந்தேகங்களுக்கான பதிலை இந்தப் பதிவில் நாம் பார்க்கலாம்.
கோவிலுக்கு செல்லும் அனைவரும் மணி அடிப்பது ஏன் பூஜை செய்யும் போது பயன்படுத்தப்படும் ஒரு பொருளாக உள்ள மணி ஓசையின் பின் ஒரு அறிவியல் நுண்ணறிவும் இருக்கிறது.
கோவில் மணி அடித்துவிட்டு வணங்கினால், தங்களின் வேண்டுதலை கடவுள் காது கொடுத்து கேட்பார் என்று சிலர் நினைப்பார்கள். ஆனால் 
அது உண்மை அல்ல.
ஆகம சாஸ்திரங்களின் படி, கோவில் மணியில் இருந்து வெளிப்படும் ஓசை எதிர்மறை சக்திகளை விரட்டி, மனதிற்கும், உடலுக்கும் நேர்மறை சக்தியை அதிகரிக்க செய்கிறது.
கோவில் மணியின் ஓசை மனிதனின் மூளை செயல்திறனை மேலோங்க செய்கிறது என்று அறிவியலில் ஒரு பின்னணி 
இருக்கிறது.
கோவில் மணியின் ஓசை தனித்துவமாக கேட்பது ஏன் கோவில் மணியில் இருந்து வெளிவரும் ஒலியில் ஒரு தனித்துவம் இருக்கும். அதற்கு கோவில் மணிகளில் உள்ள கேட்மியம்,
துத்தநாகம், நிக்கல், குரோமியம் மற்றும் மாங்கனீசு போன்ற உலோகங்கள்
 தான் காரணமாகும்.
கோவில் மணியில் இருந்து வெளிவரும் ஒலியானது, மூளையின் வலது மற்றும் இடது பக்கங்களை ஒரு சமநிலைக்கு கொண்டு
 வர உதவுகின்றது.
கோவில் மணியில் இருந்து வெளிப்படும் சத்தம் உடலில் நேர்மறை ஆற்றல் மற்றும் மூளையில் செயல்திறனை அதிகரிக்கச் செய்து,விழிப்புணர்வை மேம்படுத்தி, மனதிற்கு நிறைவான அமைதி மற்றும் 
நிம்மதியை அளிக்கிறது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>




வெள்ளி, ஜூலை 15, 2022

நீங்கள் ஒரு ரூபாய் தானம் செய்தால் ஒரு கோடி பெறலாமாம்

இன்றைய தலைமுறையைச் சார்ந்த பலரின் எண்ணம் என்னவென்றால் எதையும் எளிதில் அடைந்துவிட வேண்டும் என்பதே. ஆனால் இறை அருளை பெறுவதென்பது அத்தகைய எளிதான
 விடயம் இல்லை.
ஆனால் இல்லாதவர்களுக்கு தானம் செய்வதின் மூலம் இறை அருளை கூட எளிதில் பெறலாம். ஒரு ரூபாய் தானம் செய்து ஒரு கோடி ரூபாய் பெறுவதெப்படி என்பதை பற்றி இப்போது
 பார்ப்போம்.
வைகாசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசிக்கு வரூதிநி ஏகாதசி என்று பெயர். அந்த நாளில் காலையில் எழுது குளித்துவிட்டு பெருமாள் கோவிலிற்கு சென்று துளசி அர்ச்சனை செய்வது பல 
நன்மைகளை தரும்.
அதோடு அன்றைய தினத்தில் பணத்திற்காக கஷ்டப்படும் எழமானவர்களின் கல்விக்கு உதவும்படியாக ஒரு ருபாய் தானம் செய்தாலும் அது பல கோடிகளாய் நமக்கு திரும்ப கிடைக்கும் என்பது ஐதீகம்.
அதே போல் வைகாசி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசிக்கு மோகினி ஏகாதசி என்று பெயர். அன்று காலை எழுந்ததும் குளித்துவிட்டு பெருமாள் கோவிலிற்கு சென்று வழிபட்டால் பாவம் நீங்கி 
புண்ணியம் பெருகும்.
அதோடு புத்தி கூர்மையடையும். இந்த மாபெரும் ரகசியத்தை ராமபிரான் அவரது குல குருவான வசிஷ்டரிடம் கேட்டறிந்ததாக 
புராணம் கூறுகிறது

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>




வெள்ளி, ஜூலை 08, 2022

எம் வீட்டிற்கு தெய்வ சக்தியை கொண்டு வருவது எப்படி தெரியுமா

பொதுவாக எல்லோரும் தங்களின் வீட்டில் தெய்வம் குடிகொண்டாள் நன்றாக இருக்கும் என்று எண்ணுவோம். அந்த எண்ணத்திற்கு பின்னால் பல சுயநலன்கள் அடங்கியுள்ளது என்பது வேறு விடயம்.
வீட்டில் சில செயல்கள் செய்தால் தெய்வ சக்தி விலகிவிடும் 
அதேபோல் சில செயல்கள் செய்தால் தெய்வ சக்தி அதிகரிக்கும். உங்கள் வீட்டில் என்ன செய்தால் தெய்வ சக்தி அதிகரிக்கும் என்பதை இந்த பதிவில் 
பார்ப்போம் வாருங்கள்.
நீங்கள் புதிதாக குடிபோகும் எந்த ஒரு வீட்டிற்கும் தெய்வ சக்தியினை கொண்டு வர ஜீவசக்தி கொண்ட ஏதாவது ஒரு உயிரினத்தை கொண்டுசெல்வது அவசியம். மனிதர்களைக் காட்டிலும் பறவைகளிடம் இந்த 
ஜீவசக்தியானது அதிகமாக உள்ளது.
வீட்டில் சிட்டுக்குருவி, புறா, அணில் போன்ற பறவை, விலங்குகள் இருந்தால் தெய்வ சக்தி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இந்த உயிரினங்களுக்கு தெய்வ சக்தியை அறியும் ஆற்றல் உள்ளது என அறியப்படுகிறது.
உங்கள் வீட்டு வாசலிலோ இல்லை ஏதாவது சந்திலோ 
தானியங்களை பரப்பி வைத்தால் குருவி, புறா போன்ற பறவைகள் அதை உண்ண வந்து செல்லும். இந்த சந்தர்பத்தில் அவை அங்கேயே கூடு கட்டி வாழ்ந்து குஞ்சு
 பொரிக்கவும் வாய்ப்புகள் உள்ளன.
புறா, குருவி போன்ற ஜீவசக்தி கொண்ட ஜீவன்கள் கூடு கட்டினால் அதனை கலைக்கக்கூடாது. தெய்வ சக்தி கொண்டு வரும் திறன் கொண்டவை இவை என்பதால், இவற்றின் கூட்டை கலைப்பது, வீட்டிற்கு
 கெட்ட சகுனமாக அமையலாம்.
புறா, குருவி போன்ற பறவைகள் மற்றும் அணில் போன்ற உயிரினங்கள் உங்கள் வீட்டிற்கு வந்தால், அவற்றை மிரட்டவோ விரட்டவோ வேண்டாம். இவை உங்கள் வீட்டிற்கு வந்து போவதால்
 நன்மையே நடக்கும்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>


ஞாயிறு, ஜூலை 03, 2022

நாட்டில் மன்னார் திருக்கேதீஸ்வரத்துக்கு படையெடுக்கும் பக்தர்கள்

 

ன்னார் அருள்மிகு திருக்கேதீஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக நிகழ்வை முன்னிட்டு எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு  03-07-2022-இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு சிவ சிறி தியாகராஜா கருணானந்த குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.இன்றைய தினம்(3) திருக்கேதீஸ்வர ஆலய பாலாவி தீர்த்தக்கரையில் ஆறுமுக நாவலருக்கான சிலையும், திருக்கேதீஸ்வர ஆலயத்தில் உள் நுழையும் வீதியில் சுமார் 28 அடி நீளமான சிவன் சிலையும் வைபவ ரீதியாக திறந்து 
வைக்கப்பட்டது.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த பக்த அடியார்கள் எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.தொடர்ந்தும் நாளை திங்கள் 4 ஆம் மற்றும் 5 ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் எண்ணைக் காப்பு சாத்தும் நிகழ்வு நிறைவடையும்.
பின்னர் கிரிகைகள் இடம் பெற்று 6 ஆம் திகதி புதன்கிழமை காலை சுப முர்த்த வேளையில் மஹா கும்பாபிஷேக பெருவிழா 
இடம்பெற உள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



வெள்ளி, ஜூலை 01, 2022

சுவிஸ் சூரிச் அருள்மிகு சிவன் கோவில் கொடியேற்றம் 01.07.2022

சுவிற்சர்லாந்து  சூரிச் அருள்மிகு சிவன் கோவில் வருடாந்த மகோற்சவ திருவிழா நிகழும் மங்களகரமான திருவள்ளுவர் ஆண்டு 2053 சுபகிருது வருடம் ஆனித் திங்கள் 17ம் நாள் (01.07.2022) வெள்ளிக்கிழமை முதல்
 ஆனித்திங்கள் 28ம் நாள் (12.07.2022) செவ்வாய்க்கிழமை வரை வருடாந்த பெருவிழா வெகு சிறப்பாக நடைபெற திருவருள் கைக்கூடியுள்ளது
.01.07.2022 வெள்ளிக்கிழமை அன்று கொடியேற்ற
 பூசை வழிபாடுகளுடன் வெகுவிமர்சையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அடியவர்கள் இவ்விழாகாலங்களில் ஆசாரசீலர்களாக வருகைதந்து,  எம் பெருமானின் அருள் பெற்று 
நலமுடன் வாழ்வீராக

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>








புதன், ஜூன் 29, 2022

யாழ் நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம் ஆரம்பம்


யாழ்ப்பாணம் – நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவமானது.29-06-2022. இன்றைய தினம்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
இதன் ஒரு அங்கமாக, நேற்று(28) காலை விநாயகர் வழிபாடு, நாகபூசணி அம்மன் ஆலயத்தின் பிரதம குரு தலைமையில் சிவாச்சாரியார்களின் பங்குபற்றுதலோடு சிறப்பாக இடம்பெற்றது.
இலங்கையில் தாய்தெய்வ வழிபாட்டின் மிகு தொன்மைக்குச் சான்றாக விளங்கும் நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் வருடாந்த பெருந்திருவிழா இன்று புதன்கிழமை பகல் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 15 தினங்கள் உற்சவம் நிகழவுள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>




வெள்ளி, ஜூன் 17, 2022

பசுவை வீட்டிற்குள் புதுமனைப் புகுவிழாவில் அழைத்து வருவதன் காரணம்

முப்பத்து முக்கோடி தேவர்களில் இருந்து மூவர்கள், அதாவது சிவன், பிரம்மா, விஷ்ணு, சக்தி என அத்தனை தெய்வங்களும் குடிகொண்டிருக்கும் ஜீவராசி பசு. அதனால்தான் பசுவை குருவின் அம்சம் என்று சொல்வார்கள். பிரகஸ்பதி, குரு மாறுகிறாரே அதனுடைய அம்சம் பசு. பசுவின் கொம்பில் இருந்து, கண் இமையிலிருந்து, வாய் நுனி வரைக்கும் அத்தனையிலும் தேவர்களும், மூவர்களும் வாசம் செய்வதாக ஐதீகம்.
பசுவின் பின் பக்கத்தில் லட்சுமி தேவதை குடியிருக்கிறார். அதனால் பசுவை பின் பக்கத்தில் தொட்டுக் கும்பிடுவார்கள். லட்சுமி கடாட்சம் உண்டாகட்டும் என்பதற்காக. காரணம், பசு தனக்கென்று எதையும் எடுத்துக் கொள்வதில்லை. பசுஞ்சாணம், பசுங்கோமியம் அத்தனையும் அறிவியல்பூர்வமாக பார்க்கும் போது கிருமி நாசினியாக இருக்கிறது. இதுமட்டுமல்லாமல், 
நல்ல பசும்பால் குழந்தைக்கு தாய்ப்பாலுக்கு சமமாக உள்ளது. குழந்தைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத அளவிற்கு சிறந்த உணவாகவும் 
அது அமைகிறது.
அதனால்தான் பசுவை வீட்டிற்குள் அழைத்து வந்தால் முப்பத்து முக்கோடி தேவர்களில் இருந்து, சிவன், பிரம்மா, விஷ்ணுவில் இருந்து அத்தனை பேரும் வாசம் செய்வதாக ஐதீகம். பசுவை அழைத்து வரும் போது அந்த வீட்டில் கோமியமிட்டாலோ, சாணமிட்டாலோ அவர்களுக்கு இன்னமும் அதிர்ஷ்டம் என்றும் நம்பப்படுகிறது.
தரையில் பசுஞ்சாணத்தை தெளித்து மெழுகி கோலம் போட்டு வந்தால், அந்த பசுஞ்சாணம் தெளித்த இடத்தில் ஒரு செழிப்பு தெரியும். அதனால்தான் முக்கியமான நிகழ்ச்சிகளிலெல்லாம் பசுஞ்சாணத்தை தெளித்து, மெழுகி செய்வார்கள். இன்னும் சிலர் பசுஞ்சாணத்தை உருட்டி அதன் மீது விளக்கேற்றுவார்கள். பிள்ளையாரையும் பசுஞ்சாணத்தால் பிடித்து அதன் மீது அருகம்புல் செருகி மந்திரங்களை சொல்லும் போது உடனடியாக நமக்கு எல்லா பலன்களும் கிடைக்கும்.
இதுபோல பசுவினுடைய அத்தனையும் நமக்கு எல்லா வகையிலும், எல்லா விதத்திலும் பயன்படுகிறது. பசுவிற்கு பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து எல்லா தோஷத்தையும் நீக்கக் கூடிய சக்தி உண்டு. இந்த மாதிரியான தெய்வ அமைப்பு பசுவிற்கு மட்டும் அமைந்துள்ளது. தற்பொழுது
 இவர்கள் ஜெர்சி பசுவை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கெல்லாம் எந்தப் பலனும் இல்லை. நம்ம நாட்டுப் பசு, அதற்கும் முன்பாக பார்த்தால் காராம்பசு.என்னுடைய தாத்தா காலத்திலெல்லாம் காராம் பசுக்கள் நிறைய இருந்தது. காராம்பசுவினுடைய காம்புகளைப் பார்த்தால் சிறியதாக இருக்கும். ஆனால் கறக்க கறக்க பால் வரும். அந்தப் பால் பணங்கற்கண்டு பால் போன்று இருக்கும். அப்படியே குடிக்கலாம். அதற்கடுத்து, அதற்கு சில தெய்வீக அமைப்பெல்லாம் உண்டு.
அதாவது, புல் பூண்டுகளைக் கூட தேர்ந்தெடுத்துதான் மேயும். நாட்டுப் பசுவிற்கும், காராம்பசுவிற்குமே அதிக வித்தியாசம் உண்டு. நாட்டுப் பசு எல்லா புற்களையுமே மேயும், ஆனால் காராம் பசு சில வகையானப் புற்கள், சில வகையான இலைகள் மட்டும்தான் சாப்பிடும். மிகவும் சென்சிடிவானது. கோபத்துடன் தொட்டால் கூட சாப்பிடாது.
இந்த மாதிரியான தெய்வ லோக, தெய்வத் தன்மையுடைய பசுவெல்லாம் உண்டு. அதனால் பசு வீட்டிற்குள் வந்துவிட்டுச் செல்வது
 என்பது நல்லது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>




வெள்ளி, ஜூன் 10, 2022

நாம் விபூதி பூசும்போது கடைபிடிக்க வேண்டிய முறைகள் என்ன தெரியுமா

கோவிலில் இறைவனை தரிசித்த பிறகு பிரசாதமாக விபூதி வழங்கி, ஆசிர்வதிப்பது காலம் காலமாய் நடைமுறையில் இருக்கும் ஒரு வழக்கம். கோவிலில் இந்த மரபு இன்றும் வழக்கில்
 இருக்கிறது. 
இந்த விபூதியானது அதனை அணிந்து கொள்கிறவர்களை தீவினைகளில் இருந்து  காப்பாற்றும் கவசமாய் இருப்பதுடன், செல்வத்தையும் தருவதாக நம்பப்படுகிறது.
திருநீறு பூசும்போது கடைபிடிக்க வேண்டியவை வெள்ளை நிற விபூதி மட்டும் அணிய வேண்டும். முகத்தை அண்ணாந்து வைத்து நிலத்தில் சிந்தாமல் நடு மூன்று விரல்களினால் நெற்றி  நிறைய 
பூசவேண்டும்.
நடந்து கொண்டோ படுத்துகொண்டோ பூசக்கூடாது. ஆச்சாரியார், சிவனடியார் இவர்களிடம் விபூதி பெறும்போது அவர்களை வணங்கி 
பெறுதல்  வேண்டும்.
வடக்கு கிழக்குமுகமாக நின்று தான் திருநீறு பூசவேண்டும். தலையை கவிழ்த்தும் நடுங்கிகொண்டும் வாயை திறந்து கொண்டும்  பேசிக்கொண்டும் திருநீறு பூசக்கூடாது.
விபூதி வைத்திருக்கும் கலயத்தை கவிழ்த்து வைக்கக்கூடாது. கோயிலில் விபூதி பிரசாதம் வாங்கும்போது இடது கையை கீழே வைத்து வலது கையை மேலே வைத்து வாங்க வேண்டும்.
வாங்கிய விபூதியை ஒரு தாளில் இட்டு நெற்றியில் இட்டு கொள்ள வேண்டும். இடது கை விரலால் நெற்றியில் விபூதி இடக்கூடாது. ஒருவர் திருநீறு தருகிறார் என்றால் வாங்க மறுக்க கூடாது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>





வெள்ளி, ஜூன் 03, 2022

சுமங்கலிப்பெண்கள் நெற்றியில் குங்குமம் வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்

சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். அம்பிகையின் வகிட்டில் உள்ள குங்குமம் பக்தர்களுக்கு 
சேமத்தைக் கொடுக்கும்.
சுமங்கலிப் பெண்களின் சீமந்த பிரதேசம் ஸ்ரீமகாலட்சுமியின் இருப்பிடம் சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது.
வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப்பெருக்கும்.
* குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும். குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம்.
* பெண்கள் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.
* அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும். திருமணப்புடவை அரக்கு நிறத்தில் இருப்பது நல்லது.
* தெய்வீகத்தன்மை, சுபதன்மை, மருத்துவத்தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக
 நன்மைகள் உண்டாகும்.
* திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும் வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு.
* ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
*  கட்டைவிரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த 
துணிவைக் கொடுக்கும்.
* குருவிரலால் (ஆள்காட்டி விரல்) குங்குமம் அணிவது முன்னனித்தன்மை, நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை
 ஊக்குவிக்கும்.
* சனிவிரல் (நடுவிரல்) குங்குமம் இட்டுக் கொள்வது தீர்காயுளைக் கொடுக்கும். குங்குமம் அணிவது தெய்வீக தன்மை, உடல் குளிர்ச்சி மற்றும் 
சுயக்  கட்டுபாட்டிற்கு நல்லது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>


திங்கள், மே 23, 2022

திருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா.23-05-2022

யாழ் நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக உள்ள திரு,திருமதி, தியாகராஜா  
(தேவன் தர்மா)..தம்பதியினரின் 
திருமண நாள் 23-05-2022.இன்று நாற்பத்தியோராவது  வருடத் திருமண நாள்
காணும் தம்பதியினரை  அன்பு அம்மா பிள்ளைகள்,மாமிமார் மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி  இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள்  சுவிஸ் உறவுகள் இன்று திருமண நாள் காணும் தம்பதியினருக்கு இனிய கல்யாண நாள் நல் வாழ்த்துக் கவிதை உள்ளம் இணைந்த இல்லம்
என்றும் இனிக்கும் வெல்லம்!
இரு உள்ளங்கள் இணையும்
ஆரம்பம் திருமணம்
இணைந்த இரு கரம்
இமை போல் வாழ்ந்து
இமயம் போல் வளர்ந்து
என்றும் இணை பிரியாமல்
இணை பிரியாது இருந்து
இனி வரும் நாட்களில்
இன்பமாய் இருந்திட
 இனிய திருமண நாள்
வாழ்த்துக்கள்..!மணமக்களுக்கு எங்கள்  இனிய கல்யாண
நாள் நல் வாழ்த்துக்கள்.
இவர்களுடன் இணைந்து நவற்கிரி. கொம்  நிலாவரை.கொம்நவக்கிரி .கொம்   நவக்கிரி http://lovithan.blogspot.ch/
 இணையங்களும் தம்பதியினரை 
,இறை அருள் பெற்று   நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து    இன்றும் என்றும்  எல்லாமும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்கவென  வாழ்த்துகின்றன  
  வாழ்கவளமுடன்

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



சனி, ஏப்ரல் 16, 2022

காசிக்குச் சென்ற பக்தரால் சுவிஸ் ஸ்ரீவிஷ்ணு துர்க்கை ஆலயத்திற்கு வழங்கப்பட்ட உருத்திராட்ச மாலை

சுவிஸ் நாட்டில் உள்ள இலங்கை தமிழர் ஒருவர் காசிக்குச் சென்ற போது  அங்கு அவர் பிரமாண்டமான ஒரு உருத்திராட்ச மாலையை பார்த்தபின் அதேபோன்ற மாலை ஒன்று சுவிஸ் நாட்டில் உள்ள ஸ்ரீ விஷ்ணு துர்கா ஆலயத்திற்கு வழங்க வேண்டும் என்று நேர்த்தி வைத்துள்ளார்.
அதன்படி சித்திரை பவுர்ணமியை முன்னிட்டு அந்த மாலையை காணிக்கையாகச் செலுத்தினார். மாலையை சரவணபவநந்தா சுவாமிகளிடம் கையளித்தபின் அதனை விசேட வழிபாடாக நடத்தப்பட்டு தாயுமானவர் சுவாமிக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு 
போடப்பட்டது.
மிகவும் பெறுமதியான 1008 உருத்திராட்சம் கொண்ட மாலையை வழங்கியவர் தனது பெயர் விவரங்களை வெளியிட விரும்பவில்லை என
 தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



வெள்ளி, மார்ச் 04, 2022

பிறந்த நாள் வாழ்த்து திருமதி;கந்தசாமி பரமேஸ்வரி 04.03.2022

யாழ் சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திருமதி.கந்தசாமி பரமேஸ்வரி அவர்கள் 04.03.2022இன்று  தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார் இவரை மகன் மகேந்திரன் குடும்பத்தினர் யேர்மனி. மகள்சாந்திகுடும்பத்தினர் லண்டன். கண்ணன்குடும்பத்தினர்லண்டன், மைத்துனர் சின்னத்துரை குடும்பத்தினர் சிறுப்பிட்டி, இவர்களுடன் யேர்மனியில் வசிக்கும் பெறாமக்கள் இராஜேஸ்வரி குடும்பத்தினர்,குமாரசாமி குடும்பத்தினர்,தேவராசாகுடும்பத்தினர்,ஜெயகுமாரன்,குடும்பத்தினர், உற்றார் உறவினர்களும் இணைந்து
சிறுப்பிட்டி முத்துமாரி துணைகொண்டு நலமுடன் நிறைவான வாழ்வதில் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் என மகிழ்வாக வாழ்வை கொண்டு வாழ்த்து வரும்தாயே பரமேஸ்வரி தெய்வத்தின் பேரைக்கொண்டாய் எம்மைத் தெய்வமாக ஆட்சிகொண்டாய் நன்மையிலும் தீமையிலும் நற் கருத்து உரைப்பவளே எல்லாநலமும்  பெற்று குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்நோய் நொடி இன்றி பல்லாண்டு  பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென இந்த இணையமும்   நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன 

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



வெள்ளி, பிப்ரவரி 04, 2022

பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு திரு கந்தையா ராசு 04.02,2022

யாழ். நவற்கிரி புத்தூரை பிறப்பிடமகவும் வதிப்பிடமாகக்கொண்ட 
திரு கந்தையா   ராசு  அவர்களின் பிறந்த நாள் 25-01-2021.அன்று தனது பிறந்தநாளை குடும்பஉறவுகளுடன் தனது இல்லத்தில்
 04-02-2022.அன்றுகொண்டாடினர் 
 இவரை அன்புப் பிள்ளைகள் அன்புச்சகோதர்கள்   அன்பு அத்தான் அக்கா மருமகள் தங்கை மார் தம்பி சகோதர்கள்  மாமா மாமி மருமக்கள் அன்புப் பேரப்பிள்ளைகள் 
பெரியப்பா சித்தப்பா சித்தி மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் குடும்பஉறவுகள் நண்பர்கள் உறவினர்கள் வாழ்த்துகின்றனர் 
இவரை  நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் சன்னதி முருகன்
புத்தூர் அம்பாள் இறைஅருள் பெற்று இறை அருள் பெற்று அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் நோய் நொடியின்றி பிறந்த தினமான இன்றும் எறும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று அன்பு நிலைப்பெற
ஆசை நிறைவேற இன்பம் நிறைந்திட
ஈடில்லா இந்நாளில்அன்பிலும் அறத்திலும் நிறைந்து நிறைந்த செல்வங்களோடும்..
இணைந்த துணையோடும்..
நீண்ட ஆயுளோடும்...
புகழ் ஓங்கி பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழவேண்டுமென்று வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்வாழ்த்துகின்றன வாழ்கவளமுடன்

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>




நமக்கு பணவரவை ஈர்த்து அதிகரிக்க செய்யும் கருமஞ்சள்

கருத்துப் போய் உள்ள இந்த மஞ்சள் உள்ளே நீல நிறத்தில் இருக்கும். வட மாநிலங்களில் இந்த மஞ்சளை பணத்தை ஈர்ப்பதற்கு மற்றும் ஆன்மீக காரியங்களில் பயன்படுத்துவது வழக்கம்.சக்தியுள்ள கருமஞ்சள் சனி பகவான் மற்றும் ராகுவால் ஏற்படும் பாதிப்புகளையும் 
குறைகிறது.
பணம் வேண்டி வெளியில் புறப்பட்டு சென்றால் இந்த மஞ்சளை சிறிது கல்லில் இழைத்து நெற்றியில் திருநீறு போல பூசிக் கொண்டு செல்லலாம். கண்டிப்பாக சென்ற இடத்தில் எதிர்பார்த்த பணம் கிடைக்கும். பணத்தை ஈர்ப்பதில் கிராம்பை போல, கருமஞ்சளும் முக்கிய பங்கு 
வகிக்கிறது.
நீண்ட நாளாக அடைக்க முடியாத கடனை கூட உங்கள் பணப்பெட்டியில் இந்த கரு மஞ்சளை வைப்பதன் மூலம் அடைத்து விடலாம். கரு மஞ்சள் இருக்கும் இடத்தில் பண ஈர்ப்பு இருக்கும். பணப் பிரச்சினைகள் நீங்கும்.
பணத்தை ஈர்க்க பெருமளவு பயன்படும் கருமஞ்சள் உங்களுடைய பிரச்சினைகளை தீர்க்கும்.
அது மட்டுமல்லாமல் கிரக தோஷங்கள் நீங்கவும் கருமஞ்சள் உபயோகப்படுத்தப்படுகிறது.சிகப்பு அல்லது பச்சை நிற பட்டுத்துணியில் இந்த மஞ்சளை வைத்து இறுக்கமாக கட்டி அவற்றை பணம் இருக்கும் இடங்களில் வைத்து விட்டால் போதும். அந்த இடத்தில் பணவரவு அதிகமாக இருக்கும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>