siruppiddy

திங்கள், ஏப்ரல் 30, 2018

சித்திரா பௌர்ணமி! சிறப்புக்கள் ஒரு பார்வை!

சித்திரா பௌர்ணமி எனப்படுவது சித்திரை மாதத்தில் வரும் சித்திரை நட்சத்திரம் இணைந்த பௌர்ணமி தினத்தன்று அநுட்டிக்கப்படும் ஒரு நாளாகும். ‘சித்’ என்றால் ‘மனம்’ என்றும், ‘குப்த’ என்றால் ‘மறைவு’ என்றும் பொருள். 
இந்நாளில் கோயில்களிலும் ஏனைய புனித இடங்களிலும் கஞ்சி காய்ச்சி சித்திர புத்திரனார் கதை படித்து எல்லோருக்கும் கஞ்சி வார்ப்பர். இந்நாளில் முன்னோர் பொங்கல் வைத்துப் பூச்சொரிந்து குரவைக் கூத்தாடி வசந்த விழாவைக் கொண்டாடினர். 
சந்திரனும் சூரியனும் முழு நீசம் பெறும் இந்த நாளில், நாம் தெய்வங்களிடம் சரணடைந்து வழிபடுவது நன்மைகளைத் தரும் 
என்பது ஐதீகம்.
மனிதர்களின் பாவ புண்ணியங்களை எழுதி வைத்து அதற்கேற்றார்ப் போல், அவர்களின் இறப்பையும் அதன்பின் அவர்கள் வசிக்கப் போகும் சொர்க்கம்-நரகம் ஆகியவற்றை நிர்ணயிக்கும் பெரிய பொறுப்பில் உள்ள எம தர்மனின் உதவியாளரான சித்திரகுப்தனை வழிபடும் 
நாள்தான் இந்நாள்.
மனிதரின் பாவ புண்ணியக் கணக்குகளை எழுதும் பணிக்காக இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட சித்திரகுப்தன், பிறக்கும்போதே கையில் எழுத்தாணி ஏடுடன் பிறந்ததாக ஐதீகம்.
சித்திரா பௌர்ணமி பூஜை:-
சித்திரா பௌர்ணமியன்று ஒரு கலசம் ஆவாஹனம் செய்து
சித்ர குப்தம் மஹாப்ராக்ஞம் லேகனீபுத்ர தாரிணம்.
சித்ரா ரத்னாம்பரதாரம் மத்யஸ்தம் ஸர்வ தேஹினாம்
என்ற சித்ரகுப்தனின் ஸ்லோகத்தை தியானம் செய்து தீபம், தூபம் மற்றும் பூக்களால் அர்ச்சிக்கவும். வாசனைப் பொருள் கலந்த சாதம் நைவேத்தியம் செய்ய வேண்டும். 
இந்த நாளில் உப்பு, பசும்பால், தயிர் இவைகளை நீக்கி நாம் விரதம் இருப்பதுடன் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்து இறைவனின் பரிபூரண அருளைப் பெறுவோம்.
சித்ரகுப்த கோயில்:-
சித்திரகுப்தர் கோயில் காஞ்சிபுரம் நெல்லுக்காரர் தெருவில் அமைந்துள்ள இந்துக்கோயில்களில் ஒன்றாகும். இக்கோயில் இந்து மதக் கடவுள் சித்திரகுப்தரின் அரிய கோயிலாக விளங்குகிறது. இக்கோயிலின் மூலவர் சித்திரகுப்தரை வணங்கினால், இறப்பிற்குப் பின் ஞானமும், மோட்சமும் எளிதில் கிடைக்கும் என்பது 
தொன்னம்பிக்கை.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


சித்திரா பௌர்ணமி எனப்படுவது


சித்திரா பௌர்ணமி எனப்படுவது சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமிதினத்தன்று சைவ மக்களால்அநுட்டிக்கப்படும் ஒரு விரத நாளாகும்.
இந்நாளில் சைவர்கள் விரதமிருந்து கோயில்களிலும் ஏனைய புனித இடங்களிலும் கஞ்சி காய்ச்சி சித்திர புத்திரனார் கதை படித்து எல்லோருக்கும் கஞ்சி வார்ப்பர். இந்நாளில் முன்னோர் பொங்கல்வைத்துப் பூச்சொரிந்து குரவைக் கூத்தாடி வசந்த விழாவைக் கொண்டாடினர். காலப்போக்கில் இதை சிவனுடைய சிறப்பு விழாவாகவும் இறந்த அன்னையரின் பிதிர்த் தினமாகவும் அனுட்டிக்க ஆரம்பித்தனர்.
தாய் உயிருடன் இல்லாத ஆண்கள் அனைவரும் காலையில் எழுந்து நீர்நிலைகளுக்குச் சென்று நீராடி இறந்த தாயாரை நினைத்து தர்ப்பணம் பண்ணுவர். பின் வீட்டிற்கு வந்து, தாயார் படத்திற்ற்கு உணவு படைத்து பின்னர் குடும்பத்துடன் உணவு உண்பர். பொதுவாக தாயார் இறந்த ஆண்டுத் திவசம் (முதலாம் ஆண்டு) முடியும் வரை இவ்விரதம் அநுட்டிக்கக் கூடாது என்பர். பெண்கள் தர்ப்பணம் பண்ணாது இவ்விரதத்தை 
அநுட்டிப்பர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>,



முருகனின் தேர் சரிந்ததில் மக்கள் அல்லோல கல்லோலம்.

யாழ்ப்பாணம் – காரைநகர் கருங்காலி முருகன் ஆலயத்தின் தேர் திடீரென சரிந்து விழுந்துள்ளது.
கருங்காலி முருகன் ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா.29.0418.. இன்று நடைபெற்று வருகின்றது.
இதன்போது தேர் வலம் வந்துகொண்டிருக்கும் போதே சரிந்து விழுந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் எவருக்கும் ஆபத்து ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
தேர்த்திருவிழா ஆரம்பிக்கப்பட்டு இறுதியில் தேரின் இருப்பிடத்திற்கு வரும் போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. இது தெய்வக் குற்றம் ஆகிவிடுமோ எனும் அச்சம் பக்தர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

திருநெல்வேலி அரசடி ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்மன் தேர்த்திருவிழா.

திருநெல்வேலி அரசடி ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் சனிக்கிழமை காலை நடைபெற்றது.
காலை 07 மணியளவில் நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை அடுத்து உள்வீதியுளா வந்த அம்மன் காலை 8.30 மணியளவில் தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.
சிவகாமசுந்தரி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் கடந்த 15ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
அதனை தொடர்ந்து கடந்த 14 நாட்கள் மகோற்சவ திருவிழாக்கள் நடைபெற்று , இன்றைய தினம் தேர்த்திருவிழா
 நடைபெற்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஞாயிறு, ஏப்ரல் 22, 2018

பிறந்தநாள் வாழ்த்து.திரு சின்னத்தம்பி அருளானந்தம் 22.04.18.

யாழ் நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாககொண்ட திரு சின்னத்தம்பி அருளானந்தம் அவர்களின் பிறந்த நாள் ,22.04.2018. இன்று   ஐம்பதாவது .பிறந்த நாளை மிகசிறப்பாக கொண்டாடினர்   இவரை அன்பு மனைவி பிள்ளைகள் அக்கா அத்தான் அண்ணா தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை 
 நவற்கிரி   ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்   இறைஅருள் பெற்று   நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து    சகல சீரும்சிறப்பும்  பெற்று  பல்லாண்டு  பல்லாண்டு  காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் தேவன் லோவி குடும்பத்தினரும் வாழ்த்துகின்றன 
 வாழ்கவளமுடன் 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



செல்வ கடாட்சம் கிடைக்க தினமும் மகாலட்சுமிக்கு சொல்ல வேண்டியது

தினமும் மகாலட்சுமி தேவிக்கு நெய் தீபங்கள் ஏற்றிவைத்து, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து, கீழ்க்காணும் லட்சுமி ஸ்தோத்திரத்தைச் சொல்லி வழிபடுங்கள். மேலும், தங்களது
 சக்திக்கு உகந்தவாறு ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுங்கள்.இதனால், ரோகங்கள், மனத் துயரங்கள், சஞ்சலங்கள்
 ஆகிய யாவையும் நீங்கி புது நம்பிக்கைப் பிறக்கும். தேவியின் திருவருளால் வீட்டில் செல்வகடாட்சம் உண்டாகும்; நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும்.
நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே
ஸங்கசக்ரகதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
நமஸ்தே கருடாரூடே கோலாஸுரபயங்கரீ
ஸர்வபாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஸர்வக்ஞே ஸர்வவரதே
 ஸர்வதுஷ்டபயங்கரீ
ஸர்வ து:க்கஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஸித்திபுத்தி ப்ரதே தேவி புக்திமுக்தி ப்ரதாயினி
மந்த்ரமூர்த்தே ஸ்தாதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஆத்யந்த்ரஹிதே தேவி ஆத்யஸக்தி மஹேஸ்வரி
யோகஜே யோக ஸம்பூதே மகா லக்ஷ்மி 
நமோஸ்துதே
கருத்து: மகாமாயையும் ஸ்ரீ பீடத்தில் வசிப்பவளும் தேவர்களால் பூஜிக்கப்பட்டவளும் சங்கம், சக்கரம், கதாயுதம் ஆகியவற்றைத் தரித்தவளுமான மகாலட்சுமி தேவியே தங்களை
 வணங்குகிறோம்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஞாயிறு, ஏப்ரல் 15, 2018

பிரசித்திபெற்ற திருக்கோணேஸ்வரா் ஆலய தேர்த் திருவிழா.15.04.18

இலங்கையில்   பிரசித்தி பெற்ற திருகோணமலை திருக்கோணேஸ்வரா் ஆலய வருடாந்த பிரமோற்சவத்தின் தேர்திருவிழா
 15-04.2018.இன்று  காலை   அடியவர்கள் கூ ட்டத்துடன் மிகவும் சிறப்பாக திருக்கோணேஸ்வரா்  ஆலய தேர்திருவிழா நடை  பெற்றது அதன்   நிழல் படங்களில் காணலாம்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>








நமக்கு களங்கமில்லாத வாழ்க்கை வாழ விளம்பியே வரம் தருக!


விடை­பெ­றும் ஏவி­ளம்பி வரு­ட­மா­னது, சொல்­லத்­தக்­க­வாறு எந்­த­வொரு சாத­னை­யை­யும் எமக்­குத் தரா­மல், பிறக்­கின்ற விளம்பி வரு­டத்­திற்கு தனது சித்­தி­ரைப் புது­வ­ருட நல் வாழ்த்­துக்­க­ளைத் தெரி­வித்து, தான்­மு­டிக்க வேண்­டிய அரை­குறை வேலை­க­ளை­யும் ஒப்­ப­டைத்­துத் தன்­னி­ருப்­பி­டம் 
செல்­கி­றது.
புது­வ­ரு­ட­மா­னது  அனைத்­தை­யும் எமக்குத்தர  வேண்­டும்.
முற்­றத்­தில் கோலமிட்டு, விளக்­கேற்றி, பொங்­க­லிட்டு, சூரிய வணக்­கம் செய்து கோமா­தாக்­க­ளின் வரு­கை­யிலே உன்­னைப் புகழ்ந்­தேத்தி, 365 நாளும் அற்­பு­தம் செய்து நீயோ அதி­ச­ய­மாக வேண்­டும் என நாம் பணிந்து உன்­னைப் போற்­று­கின்­றோம். ஆகவே நீ வெல்­வது நிச்­ச­யம்.
விடை­காண வேண்­டும் நீ
விளம்பி என்ற சொல்­லுக்­கும் மேற்­போந்த பொறுப்­புக்­க­ளுக்­கும் விடை­கா­ணவே நீ வர­வேண்­டும். மேலும் மக்­கள் அனை­வ­ரும் சரி­நி­கர் சமா­ன­மாக வாழ­வும், , விளம்பி எனும் சித்­தி­ரைப் புத்­தாண்டே நீ வர­ம­ரு­ளப் பிறந்து வாராய்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


யாழ்நல்லூர்க் கந்தன்புத்தாண்டு தினத்தில் வீதி வலம் வந்தார்

யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தன் விளம்பி புத்தாண்டு தினமான இன்று சனிக்கிழமை (14/04/18) வள்ளி தெய்வானை சமேதராக வீதி வலம் வந்து அருள் பாலித்தார். ஏராளமான பக்த அடியார்கள் விசேட பூஜை நிகழ்வுகளில் பங்கேற்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


/>