siruppiddy

வியாழன், ஜூலை 25, 2013

பூமாதேவி ஆண்டாளாக அவதரித்த நன்நாள் ஆடி பூரம் விரதம்""

ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரம் “ஆடிப்பூரம்` என்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பூமாதேவி ஆண்டாளாக அவதரித்த நன்னாள் ஆடிப்பூரம். ஆடி மாதம் சூரியன், கடக ராசியான சந்திரன் வீட்டிலும், சந்திரன் சூரியனின் ராசியான சிம்மத்திலும் பரிவர்த்தனை பெற்றிருந்தபோது, நள வருடம், சுக்ல பட்சம், சதுர்த்தசி பூர நட்சத்திரம் கூடிய சனிக் கிழமையன்று துளசி மாடத்தினருகில் பெரியாழ்வாரால் கண்டெடுக்கப்பட்டவள் ஆண்டாள். காதலித்து அரங்கநாதனையே கரம் பற்றியவள்.ஆடிப்பூரத் திருவிழா...

செவ்வாய், ஜூலை 23, 2013

ஆடி அமாவாசை, இந்த புனித நாளின் சிறப்பு

** ஆன்மீகம் ** ஆடி அமாவாசை, எனப்படும் புனித நாளில், ஏழை எளியோருக்கு தங்களால் இயன்ற தானங்களை செய்யுங்கள். உங்கள் குடும்பம் ஆல் போல் தழைத்து சிறக்கும். இந்த நாளில், பித்ருக்களுக்கான வழிபாட்டில் முழு ஈடுபாட்டுடன் ஈடுபடுவது சிறப்பு,,,,,, &nbs...

வெள்ளி, ஜூலை 19, 2013

இறைவனுடைய ஸந்நிதானத்தில்

  சாதாரணமாக, நம் கைகள் இரண்டு விரிந்து, வளைந்து, பற்பல செய்கைகளைச் செய்கின்றன. இறைவனுடைய ஸந்நிதானத்தில் கும்பிடும்போது, அத்தகைய செய்கைகள் எல்லாம் ஒழிந்து, கைகள் ஒன்று சேர்ந்து குவிகின்றன. அவ்வாறு குவிந்திடும் கைகள் ஆண்டவனே ! இனி என் செயல் என்று ஏதும் இல்லை என்பதை உணர்ந்துவிட்டேன். எல்லாம் உன் அருட் செயலே என்ற சரணாகதி தத்துவத்தை உணர்த்துகின்ற...

தெய்வக் குறளாம் திருக்குறள்

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி வளங்குன்றிக் கால்.  மு.வ உரை:மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார். சாலமன் பாப்பையா உரை:மழை என்னும் வருவாய் தன் வளத்தில் குறைந்தால், உழவர் ஏரால் உழவு செய்யமாட்டார். பரிமேலழகர் உரை:உழவர் ஏரின் உழார்- உழவர் ஏரான் உழுதலைச் செய்யார்; புயல் என்னும் வாரி வளம் குன்றிக்கால் - மழை என்னும் வருவாய் தன் பயன் குன்றின். ('குன்றியக்கால்' என்பது குறைந்து...

வெள்ளி, ஜூலை 12, 2013

தஞ்சை பெரிய கோவிலின் வரலாறு.

தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்குச் சிறப்பு அம்சங்கள் பல உண்டு. இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட் டர் உயரமான ஒரு கற்கோயிலை ராஜ ராஜன் எழுப்பியது என்பது மாபெரும் சாதனையே. அது மட்டுமன்றி, கல்வெட் டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழி பாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங்களையும் இத் திருக்கோயிலில் புகுத்தி கோயில்...

செவ்வாய், ஜூலை 09, 2013

இறைவனுக்கு உகந்த பூக்கள் எவை

 கடவுளுக்கு மிக நெருக்கமான விடயம் பூக்கள் என்று கருதுகிறோம். அதனால் தான் இறைவனை அர்ச்சிக்க நாம் பூக்களை பயன்படுத்துகின்றோம். எத்தனையோ பூக்கள் உலகத்தில் இருந்தாலும் குறிப்பட்ட பூக்களை தான் நாம் பயன்படுத்துகின்றோம். அதுவும் குறிப்பிட்ட கடவுளுக்கு குறிப்பிட்ட பூக்களால் தான் அர்ச்சிக்க வேண்டும் என்பதே ஐதீகம்.விநாயகருக்கு, முக்கியமாக அருகம்புல் கொண்டே அர்ச்சனை செய்வார்கள். பூக்களில் செம்பருத்தி, தாமரை, ரோஜா ஆகிய பூக்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. முருகனுக்கு...

புதன், ஜூலை 03, 2013

மந்திர யோகம் - "சக்தி பீஜம்".

தாய்மை வழிபாடு அல்லது சக்தி வழிபாடு என்பது தொன்மையானதும் சக்தி வாய்ந்ததும் ஆகும். இந்த சக்திக்குரிய மந்திரமாக "ஹ்ரீம்" என்ற பீஜ மந்திரத்தை குறிப்பிடுகிறார் திருமூலர். பிரணவ மந்திரம் எப்படி சிறப்பாக விளங்குகிறதோ அது போலவே "ஹ்ரீம்" சிறந்து விளங்குகிற...

செவ்வாய், ஜூலை 02, 2013

சிதம்பர ரகசியம் என்றால் என்ன ?"

  புராணங்கள் அதைத் ' தஹ்ரம் ' என்கின்றன . உருவமின்றி இருப்பதால் ' அரூபம் ' என்றும் சொல்வார்கள் . இந்த ரகசிய ஸ்தானம் பொன்னம்பலத்தின் மத்தியப் பிரதேசத்திலும் , ஸ்ரீ நடராஜ மூர்த்திக்குப் பின்புறத்திலும் உள்ளது . இது எப்பொழுதும் ' திரஸ்க்ரிணீ ' என்கிற நீல வஸ்திரத்தால் மூடியிருக்கும் . நவரத்தினங்கள் பதித்த சொர்ண வில்வ மாலைகளால் சதா காலமும் பிரகாசித்துக்கொண்டு இருக்கும் . இந்த ரகசிய ஸ்தானத்தை எந்தப் பலனைக் குறித்தும் ஒருவன் தரிசித்தால் , நினைத்தபடி...