விடைபெறும் ஏவிளம்பி வருடமானது, சொல்லத்தக்கவாறு எந்தவொரு சாதனையையும் எமக்குத் தராமல், பிறக்கின்ற விளம்பி வருடத்திற்கு தனது சித்திரைப் புதுவருட நல் வாழ்த்துக்களைத் தெரிவித்து, தான்முடிக்க வேண்டிய அரைகுறை வேலைகளையும் ஒப்படைத்துத் தன்னிருப்பிடம்
செல்கிறது.
புதுவருடமானது அனைத்தையும் எமக்குத்தர வேண்டும்.
முற்றத்தில் கோலமிட்டு, விளக்கேற்றி, பொங்கலிட்டு, சூரிய வணக்கம் செய்து கோமாதாக்களின் வருகையிலே உன்னைப் புகழ்ந்தேத்தி, 365 நாளும் அற்புதம் செய்து நீயோ அதிசயமாக வேண்டும் என நாம் பணிந்து உன்னைப் போற்றுகின்றோம். ஆகவே நீ வெல்வது நிச்சயம்.
விடைகாண வேண்டும் நீ
விளம்பி என்ற சொல்லுக்கும் மேற்போந்த பொறுப்புக்களுக்கும் விடைகாணவே நீ வரவேண்டும். மேலும் மக்கள் அனைவரும் சரிநிகர் சமானமாக வாழவும், , விளம்பி எனும் சித்திரைப் புத்தாண்டே நீ வரமருளப் பிறந்து வாராய்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக