siruppiddy

வியாழன், ஆகஸ்ட் 12, 2021

ஆடிக் வெள்ளியில் இந்த 1 பொருளை வாங்கினால் வறுமை நீங்கும்,

ஆடி மாதம் என்றாலே மங்கல பொருட்களுக்கு பஞ்சமே இல்லாமல் வாங்கி குவிக்கக் கூடிய ஒரு இனிய மாதமாக இருக்கிறது. ஆடி மாதத்தில் வாங்கும் எந்த ஒரு மங்களப் பொருட்களும் பன்மடங்கு பெருகி நமக்கு சுபீட்சத்தை அள்ளிக் கொடுக்கும். அது மட்டுமல்லாமல் மகாலட்சுமி வாசம் செய்யும் மங்கல பொருட்களாக இருக்கும் மஞ்சள், குங்குமம் போன்ற பூஜைக்கு உரிய பொருட்களை ஆடி மாதத்தில் வாங்கினால் மாங்கல்ய 
பலம் நீடிக்கும்.
ஆடி மாதம் வாங்க கூடிய எந்த ஒரு பொருளும் அள்ள அள்ள குறையாத செல்வத்தை கொண்டு வந்து சேர்க்கும். கடைசியாக வரும் ஆடி வெள்ளியில் இந்த பொருளை வாங்கி வையுங்கள். ஏற்கனவே இந்த பொருளை வாங்கிவிட்டு இருந்தால் கூட பரவாயில்லை, கொஞ்சமாவது அன்றைய நாளில் இந்த ஒரு பொருளை வாங்கி பயன்படுத்துவதால் ஏழேழு பிறவிக்கும் வறுமை நீங்கி, செல்வம் ஆனது உயரும். அப்படி என்ன பொருள் அது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து பதிவை நோக்கி 
பயணிப்போம்
ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளியிலும் ஏதாவது ஒரு மங்கல பொருட்களை வாங்கி வருவது நல்லது. அவை புதிதாக நம்மிடம் சேரும் பொழுது தெய்வ கடாட்சம் ஆனது நீடித்து நிலைத்து 
நிற்கும். குறிப்பாக வாசனை மிகுந்த மங்கல திரவியங்கள், பொடிகள் போன்றவற்றை வாங்குவது மிகவும் சிறப்பான பலன்களைக் 
கொடுக்கும். ஜவ்வாது, 
அத்தர், பன்னீர், புனுகு, ஏலக்காய், பச்சை கற்பூரம் போன்ற பொருட்களை வாங்குவது இன்னும் சிறப்பு. நீங்கள் ஒவ்வொரு முறை சாமி கும்பிடும் பொழுது உங்கள் பூஜை அறையில் கட்டாயம் பஞ்ச பாத்திரத்தில் தண்ணீரை வைக்க வேண்டும். ஒவ்வொரு முறை பூஜை செய்யும்
 பொழுதும் அந்த தண்ணீரை புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். பஞ்ச பாத்திரத்தில் இருக்கும் தண்ணீர் மறுநாள் பார்த்தால் கொஞ்சம் குறைந்து இருக்கும். எனவே அந்த தண்ணீரை மீண்டும் பயன்படுத்தக் கூடாது. புதிதாக தண்ணீரை நிரப்பி தான் 
பயன்படுத்த வேண்டும்.
ஞ்ச பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி வைத்தால் மட்டும் போதாது, அதை தீர்த்தமாக மாற்ற துளசி இலைகள், பச்சை கற்பூரம், கிராம்பு போன்றவற்றை சேர்ப்பது உண்டு. இது எதுவுமே உங்களிடம்
 இல்லை என்றால் கூட பரவாயில்லை. ஏலக்காயை மட்டும் நுணுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். பூஜை அறை முழுவதும் தெய்வீக மணம் கமழும். வீட்டில் 
இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் விலகி ஓடிவிடும். பிரச்சனைகள் தானாகவே குறைய ஆரம்பித்துவிடும். அது போல 
ஆடி வெள்ளியில் கடைசி நாளில் வாசனைப் பொருட்களை வாங்குவதும், கூடவே ‘அரிசி’ வாங்கி வைப்பது மிகவும் நல்லது. அன்னபூரணியாக இருக்கும் அரிசியை
 ஆடி கடைசி வெள்ளி அன்று வாங்கினால் அற்புத பலன்களை காண முடியும். குடும்பத்தில் இருக்கும் வருமானப் பற்றாக்குறை நீங்கி, வறுமை அகன்று, செல்வம் ஆனது பன்மடங்கு உயரும். தன, தானியம் பெருகும் என்பது நம்பிக்கை எனவே ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அன்று உங்களிடம் அரிசி இருந்தாலும், ஒரு கிலோ அரிசியை வாங்கி அன்றைய நாளில் அந்த புது அரிசியை கொண்டு சமைத்து, அம்பாளுக்கு சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் படையுங்கள்! இப்படி செய்வதால் சிறப்பானதொரு பலனை காணலாம்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக