
முத்தமிழால் வைதாரையும் வாழ வைக்கும் முருகன் தமிழர்களின் தனிப் பெரும் கடவுள். முருக வழிபாடு தமிழ் மக்களிடையே தொன்று தொட்டு வழங்கி வரும் ஒரு வழிபாடாகும்.முருகு என்பதற்கு
இளமை, இனிமை, அழகு எனப் பல்வேறு பொருள்கள் உண்டு. சரவணப் பொய்கையில் பிறந்தவன் ஆகையால் சரவணபவன் எனவும், கார்த்திகைப் பெண்கள் வளர்த்த காரணத்தால் கார்த்தித்திகேயன் எனவும், இளமையே வடிவான காரணத்தால் முருகனைக் குமரக் கடவுள் எனவும், தந்தைக்கே
பிரணவப் பொருளை
உணர்த்தியவன் ஆகையால்...